முகப்பு
பெண்கள் கேள்வி பதில்களின் தொகுப்பு
கேள்வி பதில் (அறிமுகம்)
கேள்வி பதில் (பாகம் 1)
கேள்வி பதில் (பாகம் 2)
கேள்வி பதில் (பாகம் 3)
கேள்வி பதில் (பாகம் 4) (7 முதல் 30 வரை)
கேள்வி பதில் (பாகம் 5) (31 முதல் 65 வரை)
இஸ்லாமிய பத்திரிக்கைகளில் வெளிவந்த பெண்களுக்கான கேள்விகளும் பதில்களும்
பெண்கள் கேள்வி பதில்களின் தொகுப்பு
கேள்வி பதில் (அறிமுகம்)
கேள்வி பதில் (பாகம் 1)
கேள்வி பதில் (பாகம் 2)
கேள்வி பதில் (பாகம் 3)
கேள்வி பதில் (பாகம் 4) (7 முதல் 30 வரை)
கேள்வி பதில் (பாகம் 5) (31 முதல் 65 வரை)
கேள்வி.31
மகப்பேறு மருத்துவ மனைகளில் ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்கிறார்களே அதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
பதில்:
உஹதுப்போரின் போது மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டு விட்டு பின்வாங்கிச் சென்றபோது. நான் அபூபக்கர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களையும் உம்மு சுலைம்(ரலி) அவர்களையும் கண்டேன். அவர்கள் இருவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பைகளைத் தமது முதுகுகளில் சுமந்து வேகவேகமாக நடந்து சென்று காயமடைந்த வீரர்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றினார்கள் தண்ணீர் காலியானதும் திரும்பிச்சென்று நீரை நிரப்பி மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றினார்கள். நான் அவர்களுடைய கால்களில் அணிந்திருந்த கால் தண்டைகளைப் பார்க்கும் அளவுக்கு வரிந்து கட்டீக் கொண்டு விரைந்து செயல்பட்டார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.
நூற்கள். முஸ்லிம் புகாரி.
(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்வோம். அப்போது போரில் படுகாயமடைந்த வீரர்களுக்கு நீர் புகட்டியும். மருந்திட்டும் வந்தோம். அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வோம். கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்களையும் மதீனாவுக்குத் தீரும்பக் கொண்டு வருவோம் என்று முஅவ்வித் பின் அஃப்ரா(ரலி) அவர்களின் மகள் ருபய்யிவு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூற்கள். புகாரி. அஹ்மத்.
மேற்கண்ட நபிமொழிகளில் போர் போன்ற அபாயமான காலக்கட்டத்தில் ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் மருந்திட்டு நீர் புகட்டி அவர்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு எடுத்துக் சென்றிருப்பதால் கூடும் என அறிய முடிகிறது. என்றாலும் இப்பொழுது பெண் டாக்டர்கள் இருக்கும் போது பெண் டாக்டரிடமே காட்டி மருத்துவம் செய்ய வேண்டும். தக்க காலத்தில் சிறந்த பெண் மருத்துவர் கிடைக்காத போது நிர்ப்பந்தம் என்ற நிலையில்தான் ஆண் டாக்டரிடம் பிரசவம் பார்க்கவேண்டும்.
கேள்வி.32
பெண்களுக்காகத் தனியாக ஜமாஅத் நடத்தும் போது ஆண்கள் சொல்வது போன்று பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டுமா? அல்லது இகாமத் மட்டும் சொன்னால் போதுமா?
பதில்:
இந்த விஷயத்தில் ஆண்கள் பெண்கள் எனத் தனிதனிச் சட்டம் கிடையாது எல்லோருக்கும் ஓரே சட்டம்தான் குர்ஆனிலோ நபிவழியிலோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்றோ அல்லது கூடாது என்றோ வந்தால் அது எல்லோருக்கும் தான் பெண்களுக்கென ஏதாவது விதிவிலக்கு உண்டுமானால் அதற்கு தினியாகச் சட்டம் சொல்லப்படும். அவ்வாறு சொல்லப்படாதவரை ஆன். பெண் என்;று பிரிக்கக் கூடாது. ஜமாஅத்தாக பெண்கள் தொழும்போது ஆண்களைப் போன்று சப்தத்தை உயர்த்தாமல் மெதுவாக பாங்கு இகாமத் கூற வேண்டும்.
கேள்வி.33
பெண்கள் வண்ணத்துப் பூச்சி போன்ற உருவம் பதித்த கிளிப் கொண்டைப் பூ ரப்பர் பேண்ட் அணிந்து கொள்ளலாமா?
பதில்:
உருவங்கள் உருவப்படங்கள் உள்ள ஆடைகளை அணியலாம். பெண்கள் வண்ணத்துப் பூச்சி போன்ற உருவமுள்ள கிளிப் கொண்டைப் பூ பயன் படுத்தலாம்.உருவப் படங்கள் அலங்காரப் பொருட்களாக வைக்கப்பட்டுப் பின்னர் மரியாதையாக வணங்கப்படும் பொருட்களாக மாறிவிடக்கூடும். எனவே மரியாதை செய்து வணங்கப்படும் விதத்தில் உருவங்கள் உருவப்படங்கள் வைக்கக்கூடாது. மதிப்பற்ற வகையில் தலையணை செயதிக்தாள் ஆடைகள் போன்றவற்றில் இருந்தால் அவற்றைப்பயன் படுத்தலாம்.
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிலிருந்த உருவப்படங்கள் வரையப்பட்ட திரைச் சீலைகளைக் கண்டு அதை அகற்றினார்கள். அதை நான் இரு தலையணைகளாக ஆக்கினேன். அதில் அவர்கள் சாய்ந்து கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூற்கள். புகாரி முஸ்லிம்.
எனவே உருவப்படம் உள்ள தலையணைகளை அவற்றில் உருவங்கள் உள்ள நிலையிலேயே ரஸுல் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளதால் உருவங்கள் அச்சிடப்பட்ட ஆடைகளை அணியலாம்.ஆடைகளில் உள்ள உருவப்படங்களுக்கு மதிப்பு ஏதும் அளிக்கப்படுவதில்லை வியர்வை அழுக்கு அவற்றில் படுகிறது.ஆயினும் பெண்கள் தமது தலையில் வண்ணத்துப் பூச்சி போள்ற உருவமுள்ள கிளிப் ரப்பர் பேண்ட் அணிந்து கொண்டு பேருந்துகளிலும் கடைத்தெருக்களிலும் பிறர் காணும் வண்ணம் தலைதிறந்து அலைவதைப் பார்க்கிறோம். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தமது அழகு அலங்காரங்களை வெளிக்காட்டக்கூடாது.மேலும் தொழும்போது இறை நினைவிலிருந்து நமது கவனத்தைத் திசை திருப்பாமல் ஆடை அணிவது அவசியம்.
நபி(ஸல்) அவர்கள் கோடுகள் போடப்பட்டிருந்த சட்டைஅணிந்து தொழுதார்கள். தொழுது முடித்ததும் எனது ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு அவரது மேலாடையை வாங்கி வாருங்கள்! ஏனெனில் இது சற்று முன் எனது கவனத்தை திருப்பிவிட்டது என்றார்கள்.
அறிவிப்பவர். ஆயிஷா(ரலி)நூற்கள். புகாரி முஸ்லிம்
கேள்வி.34
இத்தா காலத்தில் வானம் பார்க்கக் கூடாது வெளிச்சம் படக்கூடாது என்றெல்லாம் கூறுகிறார்களே! இதற்கு ஆதாரம் உண்டா?
பதில்:இத்தா என்றால் திருமணம் செய்யாமல் இருக்கவேண்டிய காலகட்டமாகும். கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும். அதாவது இந்தக் கால கட்டம் வரை அவள் மறுமணம் செய்யக் கூடாது. இறந்து போன கணவன் மூலம் இவள் கருத்தரித்தீருக்கின்றாளா என்பதைக் கண்டறிவதே இதன் நோக்கம். கணவன் இறந்த உடனே அவள் மறுமணம் செய்து விட்டால் அவனிடம் உருவாகும் குழந்தை யாருடையது என்ற பிரச்சனை ஏற்பட்டுவிடும். இதனால் தான் கர்ப்பிணிகளாக இருக்கும் நிலையில் கணவனை இழந்தவர்கள். பிரசவித்த உடன் மறுமணம் செய்ய இல்லாம் அனுமதிக்கின்றது.இத்தக் கால கட்டத்தில் அவள் மறுமணம் செய்யக்கூடாது என்பதுடன் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் விதமான அலங்காரங்களையும் தவிர்த்துக் கொள்ள இஸ்லாம் கட்டளையிடுகின்றது.
கணவனை இழந்தவள் நான்கு மாதம் பத்து நாட்கள் வண்ண உடைகள் அணியலாகாது. சுருமா இடக்கூடாது. நறுமணம் பூசக்கூடாது. நுகைகள் அணியக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்நூற்கள். அஹ்மத் அப10தாவூத் நஸயீஇதைத்தவிர நடைமுறையில் இன்று கூறப்படும் சடங்குகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமுமில்லை.
கேள்வி.35
நோன்பு பெருநாள் தொழுகை ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை பெண்களுக்கு உண்டா?
பதில்:
கண்டிப்பாக பெண்களுக்கும் பெருநாள் தொழுகை உண்டு. நபி(ஸல்) அவர்கள் இதை மிகவும் வலியுறுத்தி உள்ளனர்.நோன்புப் பெருநாளைக்கும் ஹஜ்ஜூப் பெருநாளைக்கும் இளம் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் நாங்கள் அனுப்ப வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். ஆனால் மாதவிடாய் ஏற்பட்டுள்ளவர்கள் தொழுவதை விட்டும் விலகிக் கொண்டு (மற்ற) நல்ல காரியங்களிலும் முஸ்லிம்களின் அழைப்புப் பணியிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். உம்மு அதிய்யா (ரலி) நூற்கள். புகாரி முஸ்லிம் அஹ்மத் திர்மிதி அபூதாவூத் நஸயீ இப்னுமாஜா
கேள்வி.36
பயணிகளுக்கு தொழுகையில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது போல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதாவது சலுகை உண்டா? நிறைமாதத்திலும் ஐங்காலத் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா?
பதில்:
பிரயாணிகளுக்கு வழங்கப்பட்டது போன்ற சலுகைகள் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை. அவர்கள் ஐந்து வேளையும் தொழ வேண்டும் கஸர் இல்லாமல் முழுமையாகவும் தொழ வேண்டும்.நிற்கவோ குனியவோ மற்றும் தொழுகையின் இன்னபிற விதிகளை நிறைவேற்றவோ இயலாத நிலையில் உள்ளவர்கள் அவர்களால் இயன்றவகையில் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். என்று பொதுவாக வழங்கப்பட்டுள்ள சலுகை கர்ப்பினிப் பெண்களுக்கும் உண்டு. அவர்களால் நிற்க முடியாவிட்டால் உட்கார்ந்து கொள்ளலாம். பூரணமாக ருகூவு செய்ய இயலாவிட்டால் முடிந்த அளவுக்குச் செய்யலாம். இதுபோன்ற சலுகைகள் தான் உள்ளனவே தவிர தொழுகையை விடுவதற்கோ குறைத்துக் கொள்வதற்கோ சலுகை ஏதும் கிடையாது.
கேள்வி.37
திருமணத்திற்கான (ஆண் பெண்) வயது மற்றும் வசதிகளின் வரம்புகள் பற்றி ஹதீஸ் குறிப்புகள் உள்ளனவா?
பதில்:
வாலிபர்களே! உங்களில் எவருக்காவது (திருமணம் செய்ய) வசதியிருந்தால் அவர் திருமணம் செய்யட்டும். அது (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையை தடுக்கும். (திருமணம் செய்ய) வசதி இல்லை என்றால் அவர் நோன்பு வைக்கட்டும் அது (தவறுவதிலிருந்து) அவரைத் தடுக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். இப்னு மஸ்ஊது (ரலி)நூற்கள். புகாரி முஸ்லிம்.
திருமணத்தில் நோக்கத்தில் முக்கிய அம்சம் உடலுறவுதான். இல்லற வாழ்க்கை இனிதே அமைய ஓரளவு பொருளாதாரமும் அவசியம். இதில் முதல்நிலைக்கு தகுதியில்லாதவன் திருமணம் செய்ய கூடாது. தனக்கே வழியில்லை என்ற நிலையில் உள்ள கடும் வறுமையில் உழல்பவனைத்தவிர தன்னால் உழைத்து தன் மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்றுள்ளவன் திருமணம் செய்யலாம்.
கேள்வி.38
ஆணாகினும் பெண்னாகினும் சுய இன்பம் செய்து கொள்ள இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
பதில்:
இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை. தங்கள் மனைவியர் தங்கள் அடிமைப் பெண்கள் தவிர (மற்ற வழிகளில்) தங்கள் கற்பைக் காத்துக் கொண்டவர்கள். வெற்றியடைந்து விட்டார்கள யார் இதைத்தவிர வேறு வழிகளைத் தேடுகிறாரோ அவர் வரம்பு மீறியவராவார்.(23.7)
தெளிவாகவே இதன் மூலம் சுய இன்பம் தடுக்கப்பட்டு விடுகின்றது. இது போன்ற நிலமைக்கு ஆளாகிவிடுவோர் நோன்பு வைப்பதன் மூலம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களில் யார் திருமணச் செலவுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். யார் அதற்து சக்தி பெறவில்லையோ அவர் நோன்பை மேற் கொள்ளட்டும். அது (அவனது) கற்புக்கு பாதுகாப்பாகவும் (அவனது பார்வையை அன்னியப் பெண்களைக் காண்பதை விட்டும்) தாழ்த்தக் கூடியதுமாகும்.அறிவிப்பவர். இப்னுமஸ்வூது (ரலி) நூற்கள். புகாரி முஸ்லிம்
கேள்வி.39
தற்கொலை செய்தவனுக்கு அவனது மனைவி செய்ய வேண்டிய கடமைகள் யாவை?
பதில்:தற்கொலை செய்திருந்தாலும் இயற்கையாக மரணித்திருந்தாலும் கணவன் இறந்த பிறகு மனைவி பிரத்யேகமாக எதையும் செய்ய வேண்டியதில்லை. இறந்த பிறகு அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் யாவும் சமூகத்தின் மீதே கடமையாகின்றது.
மனைவி என்ற முறையில் அவள் செய்ய வேண்டிய பிரத்யேகமான காரியம். கணவன் இறந்ததும் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் அலங்காரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் நான்கு மாதம் பத்து நாட்கள் முடியுமுன் அவள் மறுமணம் செய்யலாகாது. இந்த விஷயத்தில் கற்கொலை மரணமும் சாதரான மரணமும் ஒன்று தான்.இது போக அவள் விரும்பினால் கணவனின் உடலை அவள் குளிப்பாட்டலாம். தற்கொலை செய்துவிட்டால் அவனைக் குளிப்பாட்டலாகாது என்று தடை எதுவும் இல்லை.
தற்கொலை செய்து இறந்தவனுக்காக ஜனாஸா தொழுகை மட்டும் நடத்தக்கூடாது மற்றவர்களும் நடத்தக்கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த மறுத்துவிட்ட செய்தி முஸ்லிம் என்ற நூலில் காணப்படுகிறது.இதை தவிர தற்கொலை செய்தவன் பற்றி பிரத்யேகமான சட்டம் எதுவும் இல்லை.
கேள்வி 40.
ஒரு மனைவியின் தேவை அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு கணவனுடையது. அது போல் மனைவி தன் தாய் வீட்டிலிருந்து போட்டு வரும் நகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டிய பொறுப்பு கணவனைச் சார்ந்தது தானே!
பதில்:
மனைவியின் தேவையை நிறைவேற்றுவது கணவனது கடைமைதான். இது உணவு உடை இருப்பிடம் போன்றவைகளுக்கே பொருந்தும்.
ஆனால் சொத்தைப் பொறுத்தவரை அவரவர்களுக்கு தனி உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த வகையில் தன் தாய் வீட்டில் இருந்து கொண்டு வந்த பொருட்களுக்கு உரிமையுடையவள் அவளே! எனவே அவளின் சொத்தான நகைக்கு அவள் தான் ஸகாத் கொடுக்க வேண்டும். ஸகாத் என்பது குறிப்பிட்ட அளவு பொருட்களையுடையவர்கள் மீதே கடமையாகும். கணவன் ஏழையாகவும் மனைவி வசதி உடையவளாகவும் இருப்பதுண்டு அது சமயம் மனைவியே தன் சொத்துக்கு ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவள். பின்வரும் வசனத்தில் அல்லாஹ் முஃமின்களான ஆண்கள் பெண்கள் பற்றி கூறும் போது அவர்கள் ஸகாத்தும் கொடுப்பார்கள் என்றே கூறுகிறான் இதிலிருந்தே பெண் தன் கணவன் தான் கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்ய இயலாது என்பது தெளிவாகும்.
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள். (ஏழைவரியான) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதரக்கும் கட்டுப்படுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் விரைவில் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன் ஞானமுடையவன். (9.71)
கேள்வி 41.
தலாக் கூறப்பட்டபின் கணவன் தன் மனைவி பெயருக்கு நிலம் அல்லது நகைகொடுத்திருந்தால் அதைக் கேட்டுப் பெற உரிமை உண்டா?
பதில்:
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கிவிட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால் முந்தையமனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் (திரும்பி) எடுத்துக் கொள்ளாதீர்கள் அபாண்டாகவும் பகிரங்கமாகப் பாவகரமாகவும் அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? (40.20) இந்த வசனமும் 2.229 என்ற வசனமும் தன் மனைவியை தலாக் விட்டவன் அவனிடமிருந்து ஏற்கனவே அவளுக்கு கொடுத்திருந்த பொருட்களை திரும்பபெறக் கூடாது என்று அறிவிக்கின்றன மனைவியின் மீதுள்ள அன்பின் காரணமாகத்தான் இவன் அவளுக்கு அன்பளிப்பு வழங்குகிறான். கொடுத்த அன்பளிப்பை திரும்பபெறுதல் கூடாது என்பது நபிமொழி.அன்பளிப்பாகக் கொடுத்ததை திரும்பக் கேட்டவன். வாந்தி எடுத்து விட்டு அதையே மீண்டும் உண்ணக் கூடிய நாய் போன்றவன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர். அப்பாஸ் (ரலி) நூற்கள். புகாரி முஸ்லிம்
தலாக் கூறும் போது எதையும் கொடுத்துதான் தலாக் கூற வேண்டும் என்பதில்லை. ஆனால் மஹரை உரிய நேரத்தில் கொடுக்காமல் ஏமாற்றித்திரிவோரிடமிருந்தே தலாக் கூறும் போதாவது மஹரை கொடுத்திட நிர்ப்பந்தம் கொடுப்பதுண்டு
கேள்வி.42
கர்ப்பமான இரண்டு மூன்று மாதத்தில் இத்தா இருக்க நேரிட்டால் குழந்தை பிறக்கும்வரை இத்தாஇருக்க வேண்டுமா? இத்தா இருக்கும் சமயத்தில் குழந்தை பிறந்தால் குழந்தை பிரந்த பின்னும் இத்தா இருக்க வேண்டுமா? ஆஸ்பத்திரியில் பிறக்கக் கூடிய சு10ழ்நிலையாக இருந்தால் என்ன செய்வது?
பதில்:
மேலும் உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கை இழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவதுவற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் அப்பெண்களுக்கும் மாதவிடாயே எற்படாத பெண்களுக்கும் இத்தா (வின் தவணை) மூன்று மாதங்களாகும். தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (இத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும். மேலும் எவர் அல்லாஹ்க்கு அஞ்சி நடக்கிறாரோ அவர்களுடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (65.4)
கர்ப்பிணியின் இத்தா அவள் குழந்தை பெறும் வரையிலும்தான் குழந்தை பெற்றால் தொடர வேண்டியதில்லை என்பதை இந்த வசனம் கூறுகிறது.
ஆஸ்பத்திரியில் பிறக்கக் கூடிய சு10ழ்நிலையாக இருந்தால் என்ன செய்வது? என்ற உங்கள் கேள்வி மூலம் இத்தா இருக்கும் பெண் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று விளங்கி இருப்பது தெரிகிறதது.
இத்தா என்பது கணவன் இறந்த துக்கத்தை வெளிப்படும்தும் முகமாக தன்னை அலங்காரம் செய்யாமல் இருப்பதும் கணவனின் குழந்தை தன் வயிற்றில் உள்ளதா? என அறியவும் தான் அத்தியாவசிய தேவைக்காக ஒரு பெண் வெளியேறுவதில் எவ்வித தவறும் இல்லை.
கேள்வி.43
முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவதாக ஓர் பெண்ணை திருமணம் செய்ய கணவன் விரும்பினால் முதல் மனைவியிடம் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டுமா? மார்க்கம் என்ன சொல்கிறது?
பதில்
திருமறையின் (4:3) வசனம் மூலம் பலதார மணத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது. அந்த வசனத்தில் அல்லாஹ் ஒன்றிற்கு மேல் திருமணம் செய்து அவர்களுக்கு மத்தியில் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு மனைவியை மட்டுமே திருமணம் செய்யுங்கள் என்று அறிவிக்கின்றான்.
அந்த வசனத்தில் பலதார மணத்திற்கு நீதாமாக நடக்க வேண்டும் என்பதையே நிபந்தனையாக விதிக்கிறானே தவிர முதல் மனைவியிடம் கேட்டுத்தான் இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
இரண்டு மனைவிகள் இருந்து அவர்களிடம் நீதமாக முறையாக நடக்க முடிந்த ஒருவன் மூன்றாவதாக ஒரு பெண்னை திருமணம் செய்ய விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம், முதல் மனைவியிடம் கேட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருக்குமானால். அவன் தன் முந்தைய இரண்டு மனைவியிடமும் அனுமதி கேட்கும் போது ஒருத்தி ஆதரித்து ஒருத்தி மறுத்துவிட்டால் யாருடைய பேச்சுக்கு முன்னுரிமை தருவது என்பதால் தான் இஸ்லாம் முதல் மனைவியிடம் கேட்டுத்தான் மற்றொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கவில்லை.
கேள்வி.44
கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்காத மனைவியை அடிப்பது சரிதானா?
பதில்
கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது மனைவியின் மீதுள்ள கடமைதான். மனைவி கட்டுப்பட வேண்டியவள் என்பதற்காக சாதாரண விஷயங்களில் கூட அவளை நிர்ப்பந்தம் படுத்துவது கூடாது. அடிமையைப் போன்று நடத்துவது கூடாது.
கணவனுக்கு கட்டுப்படாத மேலும் கணவனை புறக்கணிக்கின்ற பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பின்வரும் வசனம் மற்றும் ஹதீஸ் அறிவுறுத்துகிறது.
(ஆண் பெண் இரு பாலாரில்) அல்லாஹ்சிலரை சிலரைவிட மேன்மைபடுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள் தங்கள் சொத்துக்களில் இருந்து (பெண்களுக்காக) செலவு செய்வதினால் ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வெண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும் பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டுபாதுகாத்துக் கொள்வார்கள் எந்தப் பெண்கள் விஷயத்தில் அவர்கள் (தம் கணவருக்கு) மாறுசெய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள் அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவன் வல்லமை உடையவன். (4.34)
முஸ்லிமான (கண)வன் முஸ்லிமான (மனைவியான)வள் மீது கோபப்பட வேண்டாம். அவளின் ஒரு குணத்தை அவன் வெறுத்தாலும் மற்றொன்றை அவளிடம் விரும்புவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி) நூற்கள். முஸ்லிம்
கேள்வி.45
மணமுடித்த அல்லது மணமுடிக்காத ஆண்கள் பெண்கள் விபச்சாரம் செய்தால் மார்க்க சட்டம் அவர்களுக்குத் தரும் தண்டனை என்ன?
பதில்:
(திருமணமாகாத) விபச்சாரம் பரிந்த ஆண். விபச்சாரம் பரிந்த பெண். (ஆகிய) இவர்களில் ஒவ்வொரு வரையும் நூறு கசைஅடி அடியுங்கள்.(24.2)நபி(ஸல்) அவர்கள் திருமணதாகாத ஒருவர் விபச்சாரம் செய்து விட்டதை அறிந்து அவரை நூறு கசையடி கொடுக்கவும். ஒரு வருடம் நாடு கடத்தவும் வேண்டும் எனக்கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர். அபூஹுரைரா(ரலி) நூற்கள். முஸ்லிம்.
இதே ஹதீஸின் கடைசியில் இவ்விபச்சாரத்தில் சம்பந்தப்பட்ட திருமணமான அந்தப்பெண்ணைப் பற்றி அந்தப் பெண்ணின்பால் சென்று அவளிடத்தில் கேட்பீராக. அப்பெண் (விபச்சாரத்தை) அதை ஒத்துக் கொண்டால் அவளை கல்லால் எறி(ந்து கொல்)வீராக எனக்கட்டளையிட்டதாக உள்ளது.
எனவே மணமுடித்த ஆணோ பெண்ணோ விபச்சாரம் புரிந்தால் அவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். மணமுடிக்காத ஆணோ பெண்ணோ விபச்சாரம் புரிந்தால் நூறு சவுக்கடி தரப்படவேண்டும். மேலும் ஒரு வருடம் நாடு கடத்தப்பட வேண்டும்.
கேள்வி.46
பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளலாமா?
பதில்:
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லக்கூடாது என்று பெண்களாகிய நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம் என உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கிறார். நூற்கள் புகாரி.
ஜனாஸாத் தொழுகை தொழக் கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தால் அதையும் சேர்த்துக் கூறியிருப்பார்கள் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது கப்ரு (மண்ணறை) ஸியாரத்து (சந்திப்பதற்)காகச் செல்வது தவிர ஜனாஸாவுக்குச் செய்யும் மற்ற கடமைகளைப் பெண்களும் செய்யலாம்.
பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதியுள்ளது என நாம் அறிவோம். அவ்வாறு பள்ளிக்குச் சென்று தொழும்போது தற்செயலாக ஜனாஸா கொண்டு வரப்பட்டால் அதற்கான தொழுகையில் பெண்களும் கலந்து கொள்ளலாம் அதற்குத் தடையேதும் வரவில்லை. அல்லது ஜனாஸாவைப் பின்பற்றிச் செல்லாமல் வீட்டிலிருந்து ஜனாஸாவைப் பள்ளிக்குச் கொண்டு செல்வதற்கு முன்பே வீட்டில் ஜனாஸா தொழுகையில் பெண்கள் மட்டும் தொழலாம் அதற்கும் தடையேதும் வரவில்லை. ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்தபோது இவரது உடலைப் பள்ளிக்குக் கொண்டு செல்லுங்கள்! நான் அவருக்கு ஜனாஸாத் தொழுகை தொழப்போகிறேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். மக்கள் அந்த ஜனாஸாவை பள்ளிக்குள் கொண்டு செல்வதை ஆட்சேபித்தனர். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! பைளா என்பவரின் புதல்வர்களான் ஸுஹைல் மற்றும் அவரது சகோதரருக்காக நபி(ஸல்) அவர்கள் பள்ளியில்தான் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று குறிப்பிட்டார்கள். நூல் முஸ்லிம்.
பெண்கள் ஜனாஸா தொழுவதை நபித்தோழர்கள் ஆட்சேபிக்கவில்லை பள்ளியில் ஜனாஸாத் தொழுகை நடைபெறுவதையே ஆட்சேபித்தனர் என மேற்கண்ட செய்தியின் மூலம் அறிய முடிகிறது. அதற்கான ஆதாரத்தையும் ஆயிஷா (ரலி) எடுத்துரைத்தார்கள்.
எனவே பெண்கள் ஜனாஸா தொழுகை தொழலாம் ஆனால் அதைப் பின்பற்றிச் செல்லக் கூடாது என்று மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் அறிய முடிகிறது
கேள்வி.47
பெண்கள் மெட்டி அணிவது கூடுமா?
பதில்:
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் மெட்டி அணிந்துள்ளார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் எழுந்து தொழுதார்கள் தொழுகையை முதலில் நடத்தி விட்டு பிறகு உரை நிகழ்த்தினார்கள். உரை முடிந்து இறங்கிப் பெண்களிடம் சென்று பிலாலுடைய கையில் தம்முடைய ஆடையை ஏந்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் (தங்களின்) தர்மத்தை அதில் போட்டார்கள். (ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும்) அவரிடம் பித்ரு ஸதகாவையா? என்று கேட்டேன். இல்லை அப்போது அவர்களாக விரும்பிச் செய்த தர்மத்தையே போட்டனர். கால் விரலில் அணிந்து கொள்ளும் மெட்டிகளையும் அவர்கள் போட்டுள்ளனர் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர். ஜாபிர்(ரலி) நூல். புகாரி-978
கேள்வி.48
இரவில் உளுச் செய்து விட்டு தூங்குவது நபிவழியாகும். மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள் இரவில் தூங்குவதற்கு முன் உளுச் செய்யலாமா?
பதில்:
தூய்மையற்ற நிலையில் இருக்கும் ஒருவர் தூய்மை செய்தாலும் சுத்தமாகாத நிலையில் உளுச் செய்தால் அதனால் பயன் உண்டா? என்ற எண்ணத்தில் நீங்கள் இக்கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்!
நபி(ஸல்) அவர்கள் இதனை கருத்தில் கொண்டு சொல்லவில்லை என்பதை மனைவியுடன் உறவு கொண்டபின் ஒருவர் உண்ணவோ உறங்கவோ விரும்பினால் உளுச் செய்யுமாறு நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளது நமக்கு தெரியப்படுத்துகிறது. எனவே மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் உளுச் செய்து உறங்குவதே சரியானது. உறங்குவதற்கு முன் ஒருவர் உளுச் செய்துவிட்டு இறுதியாக அல்லாஹும்ம அஸ்லம்து நஃப்ஸீ என்று தொடங்கும் துஆ-வை ஒதி உறங்கிய பின் மரணித்தால் அவர் சுவர்க்கம் புகுவார் (புகாரி, முஸ்லீம்)
என்ற நபி மொழியையும் கவனத்தில் கொண்டால் உங்கள் ஐயம் தெளிவாகும். சுவர்க்கத்திற்குச் செல்லும் ஒரு பாக்கியம் அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்திய ஒன்றால் தடைப்பட்டு போகுமா? மேலும் நபி(ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் உளுச் செய்து உறங்குவது கூடாது என்று எங்கும் கூறவில்லை.
கேள்வி.49
பெண்கள் பியூம்டி பார்லருக்கு சென்று தன்னை அழகுப் படுத்திக் கொள்ளலாமா?
பதில்:
பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று இஸ்லாம் அனுமதிக்கும் முறையில் அழகுப் படுத்திக் கொள்ளலாம்.
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து பல் வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள் (மொத்தத்தில் இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள்) மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என் நபி (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! இறைத் தூதர் எதை உங்களுக்கு கொடுத்தாரோ அதை எடுத்தக் கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களை தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்பதே அந்த (59:77) வசனம் என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். அல்கமா நூல். புகாரி (5931)
நபி (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல் ஒப்பனைசெய்து கொள்பவர்களையும் பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்துக் கொள்பவர்களையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி)நூற்கள். புகாரி. (5885) திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, அஹ்மத்.
நபி(ஸல்) அவர்கள் தடைச் செய்த மேற்கூறப்பட்ட காரியங்களை கவனத்தில் கொண்டு தடைஇல்லாத விஷயத்தில் அழகுப் படுத்திக் கொள்ளலாம். இன்று அழகு நிலையங்கள் என்ற பெயரில் பல தவறான காரியங்கள் நடப்பதாக செய்திகள் வெளிவருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
கேள்வி.50
பெண்களுக்க இந்திரியம் வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகுமா?
பதில்:
உம்முஸுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்து சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்டார் (ஆம்! அவள் உறங்கி எழுந்ததும் தன் ஆடையில் இந்திரித்) தண்ணீரைக் கண்டால் (குளிப்பது அவள் மீது கடமை தான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள் தமது முகத்தை வெட்கத்தால் மூடிக் கொண்டு பெண்களுக்கு ஸ்கலிதம் ஏற்படுமா? என்று கேட்டார் "ஆம் அப்படி இல்லையென்றால் அவளது குழந்தை (சில சமயங்களில்) எதனால் அவளைப் போன்றிருக்கிறது என்று கேட்டார்.
அறிவிப்பவர். ஜைனப் பின்த் உம்மு ஸலமா (ரலி) நூற்கள். புகாரி (130) முஸ்லிம்
கேள்வி.51
பெண்கள் ஒட்டுமுடி வைப்பதற்கு ஹதீஸில் தடை உள்ளது. ஆண்கள் ஒட்டுமுடி (டோப்பா) வைக்கலாமா?
பதில்:
ஒட்டுமுடி வைக்கும் பெண்கள், அதற்கு உதவும் பெண்கள் இருவரும் சாபத்திற்குரியவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்) ஒட்டு முடி விசயத்தில் நபி (ஸல்) அவர்கள் பெண்களையே குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள். ஆண்களை அதில் சேர்க்கவில்லை. எனினும் வேறு சில ஹதீஸ்களின் துணைக்கொண்டுப் பார்த்தால் ஆண்களும் ஒட்டு முடி (டோப்பா) வைப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவோம்.
ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சக்களத்தி ஒருத்தி இருக்கிறாள் நான் அவரிடம் என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாக காட்டிக்கொண்டால் அது குற்றமாகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கிடைக்கப் பெறாத ஒன்றைக் கிடைத்ததாக காட்டிக்கொள்கிறவர் போலியான இரு ஆடைகளை (அதாவது போலியான மேல் மற்றும் கீழ் ஆடைகளை) அணிந்து கொண்டவர் போலாவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். அஸ்மா (ரலி) நூல் புகாரி. (5219)
இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்வதை இச்செய்தியிலிருந்து அறிந்துக் கொள்ளலாம். டோப்பா என்பது முடியில்லாதவன் முடியிருப்பவனைப் போன்று காட்டிக் கொள்வது தான். பிற்தாலத்தில் ஒரு கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் கருப்பு நிறத்தால் தலை முடிகளுக்கு சாயமேற்றுவார்கள். அவர்கள் சுவர்க்கத்தின் வாசனையைக் கூட நுகர முடியாது. என்று நபி (ஸல்) அவாக்ள் கூறியுள்ளார்கள்.
நூற்கள். நஸயீ, அபூதாவூத், அஹ்மத்
அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை மக்காவெற்றியின் போது இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள். அப்போது அவருடைய முடிகள் நரைத்திருந்தன. இதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் கருப்பைத் தவிர்த்து வேறு கலரில் முடிகளுக்கு சாயமேற்றி மாற்றுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
நூற்கள் .நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்
நரைத்த முடிகளுக்கு டை அடித்துக் கொள்ள அனுமதித்த நபி (ஸல்) அவர்கள் கருப்பு நிறத்தை மட்டும் தவிர்க்க சொன்னதற்கு காரணமென்ன? பொதுவாக தலைமுடி கருப்பாக இருக்கும். அவருடைய வயது முதிரும்போது முடிகள் நரைக்கத் தொடங்கும் போது இவர் குறிப்பிட்ட வயதைத் தாண்டியவர் அல்லது குறிப்பிட்ட நோய் தாக்கப்பட்டவர் என்று அறிய முடிகிறது. கருப்பு நிறத்தை நரை முடிகளுக்கு தடவும் போது இக்குறைகள் வெளிப்படாது. கருப்பு அல்லாத வேறு நிறம் தடவுவதினால் நரைத்த முடிகளுக்கு தான் சாயமேற்றியுள்ளார்கள் என்று மக்கள் சாதாரணமாகப் புரிந்துக் கொள்வார்கள். எனவே தான் கருப்பு சாயமேற்றுதல் மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் தடைச் செய்துள்ளார்கள். இதைப் போன்று ஆண்கள் டோப்பா வைக்கும்போது அழகிய தோற்றமுள்ளவர், நல்ல ஆரோக்கியமானவர், இளைஞர் என்ற பொய் தோற்றம் காண்பிக்கப்படுகிறது. எனவே ஆண்கள் கூட டோப்பா வைக்கக் கூடாது என்பதே சரியானது.
கேள்வி.52
அவசரத்திற்கு திரைமறைவிலிருந்து அந்நிய ஆண்களோடு பெண்கள் பேசலாமா?
பதில்:
அவசரத்திற்கு மட்டுமின்றி எப்போதும் தேவைப்பட்டால் திரை மறைவிலிருந்து அந்நிய ஆண்களுடன் பெண்கள் பேசுவதில் தவறில்லை. தேவையற்ற முறையில் தான் பெண்கள் அந்நிய ஆண்களோடு பேசக்கூடாது.
நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் நபித்தோழர்களுக்குத் திரை மறைவிலிருந்து பல நபிமொழிகளை அறிவித்துள்ளனர். போர்க்களம் போன்ற இக்கட்டான சூழ் நிலையில் காயம்பட்ட போர் வீரர்களுக்கு முதலுதவி செய்துள்ளனர். இஸ்லாம் கூறும் அடிப்படையில் ஹிஜாப் அணிந்தோ அல்லது திரை மறைவிலிருந்தோ தேவைப்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பேசுவது தடை செய்யப்பட்டதல்ல அவ்வாறு பேசும் போது குழைந்து பேசக்கூடாது என்று அல்லாஹ் தடை செய்துள்ளான்.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியரோடு பேசும்போது) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் (தவறான நோக்கம் என்ற) நோய் உள்ளதோ அவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள் (33:32)
கேள்வி.53
பெண்கள் வீட்டில் தொழுவது, பள்ளியில் தொழுவது இதில் சிறந்தது எது?
பதில்:
உங்கள் மனைவியரை பள்ளிக்குச் செல்வதை விட்டும் தடுக்காதீர்கள்! (எனினும்) அவர்களுக்கு வீடே சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வீட்டில் தொழுவதுதான் சிறந்தது. எனினும் பள்ளியில் தொழுவதை யாரும் தடுக்கக் கூடாது! ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் நேரடி கட்டளை இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களின் மனைவி மற்றும் தோழிகள் பள்ளியில் தொழுது வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
கேள்வி.54
ஒரு பெண்ணிற்கு அப்துர் ரஹீம் என்ற பெயருடையவரை திருமணம் முடித்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பெண் தொழுகையில் ரஹீம் என்ற சொல்லை உச்சரிக்கும் போது மணமகனின் நினைவு ஏற்படுவதாக கூறுகிறார் என்ன செய்யலாம்?
பதில்:
தொழும்போது இறை நினைவை மாற்றுவதற்கு ஷைத்தான் பலவகைகளில் இடையூறு செய்வான். அப்போது ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும். அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தான் தொழும்போதும் (தொழுகையில்) ஓதும்போதும் ஷைத்தான் குழப்புகிறான் என்று முறையிட்டபோது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடு பிறகு மூன்று முறை இடது புறம் துப்பு என்று கூறினார்கள். அதன் படி அவர்கள் செய்தபோது ஷைத்தானின் இடையூறுகள் நின்றன என்று கூறியுள்ளார்கள்.தொழுகையில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் நபி வழியின் அடிப்படையில் அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி மூன்று முறை இடதுபுறம் துப்பிக் கொள்ள வேண்டும்.
கேள்வி.55
புகாரி ஹதீஸ் எண் 292, 293-ல் மனைவியிடம் உறவு கொண்ட பின் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிக்க தேவையில்லை என்று கூறப்பட்டு இது கடைசிக் கட்டளையாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதே! விளக்கம் தரவும்?
பதில்:
இது கடைசிக் கட்டளையாக இருந்தது என்பது இமாம் புகாரி அவர்களின் கருத்து வேறுபாடு உள்ளது என்பதையும் அவர்கள் அங்கே குறிப்பிடுகிறார்கள். இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது இஸ்லாத்தின் ஆரம்பத்தில் இருந்த சட்டமாகும். பின்னர் இச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.
இந்திரியம் வெளிவந்தால்தான் குளிக்க வேண்டுமென இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நபி(ஸல்) சலுகை வழங்கியிருந்தார்கள். பின்னர் குளிக்க வேண்டுமென கட்டளையிட்டார்கள்
அறிவிப்பவர்: உபைபின் கஅப் (ரலி) நூற்கள். அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரமி
ஒருவர் தமது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து அவளுடன் உடலுறவு கொள்வாராயின் அவர் மீது குளிப்புக் கடமையாகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். அபூஹ_ரைரா (ரலி)நூற்கள். புகாரி (291) , முஸ்லிம், அஹ்மத்
முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூற்களில் மற்றொரு அறிவிப்பில் (இந்திரியம்) வெளியாகாவிட்டாலும் சரியே! என இடம் பெறுகிறது.
ஆணுறுப்பு பெண்ணுறுப்பை தொட்டு விட்டால் குளிப்பு கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (கருத்து)அறிவிப்பவர். அபூ மூஸா(ரலி) நூல். முஸ்லிம்
இந்த ஹதீஸ்களையெல்லாம் நாம் கவனிக்கும் போது இந்திரியம் வெளிப்பாடவிட்டாலும் குளிப்பு கடமையாகும் என்பதை விளங்கலாம்.
கேள்வி.56
கணவனை விவாகரத்து செய்த பெண்கள் இத்தா இருக்க வேண்டுமா? ஆம் எனில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்?
பதில்:
கணவனை விவாகரத்து (குலாஃ) செய்த பெண்கள் ஒரு மாதவிடாய் வரை இத்தா இருக்க வேண்டும்.
ஸாபித் பின் கைஸ் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப்பற்றையோ அவருடைய குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலை செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சரி அவருடைய (மஹராக தந்த) தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அவரும் ஆம் என்று கூறினார் பின்னர் (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். நபி (ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட அவரும் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார்.
அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி)நூல். புகாரி (5276)
அபூதாவூத் திர்மிதீ அறிவிப்பில் அப்பெண்மணியை ஒரு மாதவிடாய் இத்தா இருக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக இடம் பெற்றுள்ளது.
கேள்வி.57
பெண்கள் மாதவிடாய் காலம் முடிந்து குளிப்பது வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய நாட்களில் குளிக்கலாமா?
பதில்
மாதவிடாய் நின்று விட்டால் அன்றைய தினமே குளித்துவிட்டு கடமையான தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இதில் இந்த நாளில்தான் குளிக்க வேண்டுமென்ற கட்டளையில்லை. மாதவிடாய் எந்த நாளில் நின்றாலும் அதே நாளில் குளித்துவிட வேண்டும்.
பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் உதிரப் போக்குடையவராக இருந்தார். நபி (ஸல்) அவர்களிடத்தில் அப்பெண் (இது குறித்து) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது ஒரு நரம்பு நோய். மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள் எனக் கூறினார்கள்.
கேள்வி.58
அகீகா கட்டாயமா? அகீகா கொடுக்கும் ஆட்டின் இறைச்சியைக் கொடுப்பவர் சாப்பிடலாமா?
பதில்:
அகீகா என்பது குழந்தை பிறந்த ஏழாவது நாளில் குழந்தையின் வளர்ச்சி நன்மையைக் கருத்தில் கொண்டும் குழந்தையைத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் ஆடு அறுத்து ஏழைகளுக்கு தர்மம் செய்வதைக் குறிக்கும். இது கட்டாயம் அன்று விரும்பியவர். வசதியுள்ளவர் அகீகா கொடுக்கலாம்.
அகீகா என்பது குழந்தைக்காக அளிக்கப்படும் பிணையாகும். குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுக்கப்படும். குழந்தையின் தலைமுடி களையப்படும் குழந்தைக்கப் பெயர் சூட்டப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூற்கள். திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா
அகீகா கொடுக்கும் ஆட்டின் இறைச்சியை அகீகா கொடுக்கும் பெற்றோர் சாப்பிடலாம். அதற்கு தடையேதும் வரவில்லை.
கேள்வி.59
ஒருவர் இறந்துவிட்டால் அவரது மக்கள், உறவினர்கள் அழலாமா?
பதில்:
நபி(ஸல்) அவர்கள் தமது மகன் இப்ராஹீம்(ரலி) அவர்கள் மரணமானபோதும், தமது மகள் ஸைனப் (ரலி) அவர்களின் குழந்தையின் மரணவேளையிலும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே ஒருவர் இறந்து விட்டால் அவரது உறவினர்கள் கண்ணீர் வடிக்கலாம் என அறிய முடிகிறது. ஆனால் தகாத வார்த்தைகளைக் கூறி ஓலமிட்டு அழுவதை தடுக்கும் விதமாகப் பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வாக்குப்பிரமாணம் எடுக்கும் போது நாங்கள் இறந்தவருக்காக ஓலமிட்டு அழக்கூடாது எனவும் வாக்குப் பிரமாணம் (பை அத்) எடுத்தார்கள் என உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ. ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.
ஒருவர் இறந்த பின்பு அவருக்கு இல்லாத சிறப்புக்களை எல்லாம் கூறி அழக் கூடாது. சட்டைகளைக் கிழித்துக் கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் ஓலமிட்டு அழக் கூடாது. மொட்டை அடிக்கக் கூடாது. கண்ணீர் விட்டு சோகத்தை வெளிப்படுத்தலாம். இறைவன் பொருந்திக் கொள்ளத் தக்க வார்த்தைகளைக் கூறலாம் துஆச் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பு அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்து தமது வாயை நபி (ஸல்) அவர்களின் இரு கண்களுக்கு மத்தியில் வைத்து முத்த மிட்டனர். தமது இரு கைகளையும் கொண்டு இரு நெற்றிப் பொட்டையும் பிடித்து (உயிர் உள்ளதா) எனப் பார்த்தார்கள் பின்பு நபியே! என் தோழரே! தேர்ந்தெடுக்கப்பட்ட நபியே! என்று கூறினார்கள். (அஹ்மத்)
கேள்வி.60
நோன்பாளியாக இருக்கும் நிலையில் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அந்த நோன்பின் நிலை என்ன? நோன்பை முறித்து விட வேண்டுமா? அப்படியே அதை பூர்த்தி செய்ய வேண்டுமா?
பதில்:
மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அப்பெண் நோன்பைத் தொடர முடியாது மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழுகையையும் நோன்பையும் விட்டுவிட வேண்டும் நோன்பை மட்டும் திரும்ப நோற்க வேண்டும். மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைத் சுத்தம் செய்துவிட்டுத் தொழுதுக்கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல். புகாரி (331) அறிவிப்பவர். ஆயிஷா (ரலி)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் எங்களிடம் விடுபட்ட தொழுகையைத் தொழுமாறு ஏவமாட்டார்கள் அல்லது அத்தொழுகையை நாங்கள் தொழடாட்டோம் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
நூல். புகாரி (321) திர்மிதீ (120) அறிவிப்பவர். முஆதா(ரலி)
மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு! என்ற நபிமொழியிலிருந்து நோன்பு நோற்ற பின் மாதவிடாய் ஏற்பட்டால் நோன்பையும் விட்டுவிட வேண்டும் என்பதை விளங்கலாம் இவ்விசயத்தில் நோன்பும் தொழுகையும் ஓரே மாதிரிதான்.
கேள்வி.61
தற்சமயம் எனக்கோ எனது கணவருக்கோ எந்த வருமானமும் இல்லை. என்னிடம் கொஞ்சம் நகைகள் உள்ளன அந்த நகைகளுக்கு நான் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அப்படிக் கொடுக்க வேண்டுமென்றால் அந்த ஜகாத்தை வெளிநாடு செல்வதற்காக என் கணவருக்குக் கொடுக்கலாமா?
பதில்:
உங்களுடைய தேவைகள் செலவுகள் போக சுமார் 85 கிராம் அளவு தங்கம் அல்லது அதன் மதிப்பளவு பணம் இருந்தால் 2.5 சதவிகிதம் ஜகாத் கொடுக்கவேண்டும். இந்த ஜகாத் என்பதும் தனித்தனியாக கொடுப்பதல்ல! ஒரு கூட்டு முறையில் வழங்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜகாத் பொருளை வசூல் செய்து உரியவர்களுக்கு விநியோகம் செய்தார்கள் எனவே கணருக்குக் நாம் வழங்கலாமா? என்ற கேள்வி எழாது.
நம் பகுதியில் கூட்டு முறையில் ஜகாத் பங்கிடும் பழக்கம் பெரும்பகுதியில் இல்லாததால் கணவருக்கு நாம் வழங்கலாமா? என்ற கேள்வி எழலாம். ஜகாத் கொடுப்பதற்கு தகுதியானவர்கள் பரம ஏழைகள், ஏழைகள், ஜகாத்தை வசூல் செய்பவர்கள், இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுவதற்குரிய நிலையில் உள்ளவர்கள், அடிமைகளை விடுதலை செய்ய, கடன்காரர்கள், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர், வழிப்போக்கர்கள் இந்த எட்டு நபர்களுக்கு மட்டுமே ஜகாத் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ் 9:60 வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
இதில் கணவர் நெருங்கிய உறவினர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை அப்படியானால் கணவர் உறவினர் இவர்களுக்கு உதவி செய்யக்கூடாதா? என்று கேட்கலாம். இவர்கள் எல்லாம் ஜகாத் கொடுப்பதற்கு முன்னரே உதவி செய்யப்பட வேண்டியவர்கள் இவர்களுக்கெல்லாம் உதவி செய்தபின் ஜகாத்துக்கு உரிய அளவு செல்வம் இருந்தால் மட்டுமே ஜகாத் கொடுக்க வேண்டும் இல்லையெனில் ஜகாத் வழங்க வேண்டிய அவசியமில்லை.
கேள்வி.62
பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வேளை ஒரு சங்கு மட்டும் குழந்தைக்கு கழுதைப்பால் கொடுத்தால் சளி மற்றும் ஜன்னி போன்ற நோய் வராது என்று சொல்கிறார்கள் ஆகவே கழுதைப்பால் கொடுக்கலாமா?
பதில்:
நாட்டுக்கழுதை சாப்பிடுவது நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். நூல். புகாரி (4218, 4219, 4220, 4217, 4216, 4215) அறிவிப்பவர். இப்னு உமர் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் எதை சாப்பிட தடை செய்தார்களோ அவற்றின் அனைத்துப் பொருட்களும் ஹராமே! (பதனிடப்பட்ட தோலைத் தவிர இதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்)
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றதியின் போது நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது தூதரும் மதுபானம், (தனாக) செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர் என்று கூறினார்கள் அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர் ஆகவே அதைப்பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது அது ஹராம் எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது அவர்கள் அதை உருக்கி விற்று அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள் என்று கூறினார்கள்.
நூல். புகாரி (2236) திர்மிதீ (1218) அறிவிப்பவர். ஜாபிர் (ரலி)
நாட்டுக்கழுதையை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதால் அவற்றின் அனைத்துமே நமக்கு ஹராமாகும் எனவே கழுதைப்பாலை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.
கேள்வி.63
நமது இந்திய நாட்டில் பெண்கள் திருமணத்தின் போது கருகமணி கட்டுகிறார்கள். இதற்கு ஆதாரம் கேட்டால் ஆயிஷா (ரலி) கட்டியிருந்ததாகக் கூறுகிறார்கள் இது சரியா?
பதில்:
திருமணத்திற்காக பெண்கள் கருகமணி கட்டுவதற்கு குர்ஆனிலோ நபிவழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் கட்டியிருந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. கருகமணி கட்டுவது இந்துக்களின் மதக் கலாச்சாரமாகும்.
யார் பிற மதக் கலாச்சாரத்தைப் பின் பற்றி நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவர் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல். அபூதாவூத்
கேள்வி.64
திருமணத்திற்கு முன் பெண்கள் தந்தை பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாகப் போட்டுக் கொள்கிறார்கள் இது சரி ஆனால் திருமணத்திற்கப் பின் கணவரின் முதல் எழுத்தை இன்ஷியலாகப் போடுகிறார்களே! இது சரியா?
பதில்:
நமது நாட்டில் ஆண்களும் பெண்களும் தந்தையின் பெயரை இன்ஷியலாகப் போடுகிறார்கள் அதாவது தந்தையின் பெயரை முன்னால் சோர்க்கிறார்கள் கணவரின் பெயரை பின்னால் சேர்க்கிறார்கள் இது வழமையில் உள்ளது. உதாரணமாக பாஸ்போர்ட், பள்ளிக் கூட சர்டிபிகேட் போன்றவற்றில் தந்தையின் பெயர் எழுதப்படுகிறது. நமது நாட்டில் பெண்கள் திருமணம் ஆனவுடன் கணவனின் பெயரைத் தமது பெயர்களுக்குப் பின்னால் இணைத்துக் கொள்கிறார்கள்.
இன்ஷியலாகப் போட வேண்டுமென்றால் தந்தையின் இன்ஷியலைத் தான் போட வேண்டும். கணவரின் இன்ஷியலைப் போடக் கூடாது கணவர்கள் மாறுபடலாம் தந்தை எப்போதும் மாறமாட்டார்.
கேள்வி.65
என்னைவிட என் மனைவி குர்ஆன் ஓதத் தெரிந்திருந்தால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இமாமாக நின்று தொழுவிக்கலாமா?
பதில்:
பெண்கள் இமாமத் செய்வதில் பல கருத்துக்கள் அறிஞர்களிடையே உள்ளன.
1. பெண்கள் அறவே யாருக்கும் இமாமத் செய்யக் கூடாது.
2. பெண்கள் பெண்களுக்கு மட்டும் இமாமத் செய்யலாம். ஆண்களுக்கு இமாமத் செய்யக் கூடாது.
3. முணமுடிக்கத் தடுக்கப்பட்ட ஆண்கள் தள்ளாத வயதுடைய ஆண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கும் பெண்களுக்கும் இமாமத் செய்யலாம்.
என்று அறிஞர்கள் பல கருத்து வேறுபாடு கொள்கின்றனர்.
பெண்கள் பெண்களுக்குக் கூட இமாமத் செய்யக் கூடாது எனக் கூறுவோர் அதற்குத் தெளிவான எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை அனவே அந்தக் கருத்தை எடுத்த எடுப்பிலேயே நாம் நிராகரித்து விடலாம். பெண்கள் பெண்களுக்கு மட்டும் இமாமத் செய்யலாம் ஆண்களுக்கு இமாமத் செய்யக் கூடாது எனக் கூறுவோர் முக்கியமாக நான்கு ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.
1. தன்னை வாள் அல்லது சாட்டையைக் கொண்டு நிர்ப்பந்திக்கும் ஓர் அரசனுக்குப் பயந்தாலே தவிர ஒரு பெண் ஆணுக்குத் தொழுவிக்க வேண்டாம். ஒரு கிராமப்புற அரபி ஒரு முஹாஜிருக்குத் தொழுவிக்க வேண்டாம். ஒரு கெட்டவர் ஒரு முஃமினுக்குத் தொழுவிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா)
2. ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (4:34)
3. பெண்கள் தலைமைப் பொறுப்பு ஏற்கும் சமுதாயம் வெற்றி பெறாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)
4. ஜமாஅத்தில் பெண்கள் பங்கெடுத்தால் முதல் வரிசையில் ஆண்கள் நிற்க வேண்டும் இரண்டாவதாக சிறுவர்கள் நிற்க வேண்டும் கடைசியாகப் பெண்கள் நிற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)
இந்த நான்கு சான்றுகளைத் தான் அவர்கள் முன் வைக்கிறார்கள். இவற்றில் முதலாவது ஆதாரமான இப்னுமாஜா ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றகள்ள. அல்வலீத் புன் புகைர் அபூஹன்னாப் என்பவரும் அலீ இப்னு ஜைத் என்பவரும் பலவீனமானவர்கள் அப்துல்லாஹ் பின் முஹம்மது அல் அதவீ என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் விடப்பட்டவர். ஆகவே இந்த அறிவிப்பை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மற்ற மூன்று ஆதாரங்களும் நேரடியாக இமாமத் குறித்துப் பேசும் ஆதாரங்களாக இல்லாவிட்டாலும் பொதுவாக தலைமை எனக் கூறப்படுவதால் இமாமத்தையும் எடுத்துக் கொள்ளும் என்பது இவர்களது வாதம். பொதுவாகக் கூறப்படும் போது இமாமத்தும் இதில் அடக்கமாகும் என்ற வாதம் சரியானது என்றாலும் பெண்கள் இமாமத் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு விதமாகக் கூறி விட்டதால் இமாமத் இதற்குள் அடங்காது என்பதைக் கவனிக்கத் தவறி விட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்ற போது உம்மு வரகா (ரலி) அவர்கள் உங்களுடன் போருக்கு வர எனக்கு அனுமதி தாருங்கள் எனக்கும் ஷஹாதத் எனும் வீர மரணத்தை அல்லாஹ் தருவான் எனக் கேட்டார் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ வீட்டிலேயே இருந்து கொள். அல்லாஹ் உனக்கு வீர மரணத்தைத் தருவான் எனக் கூறினார்கள். இதனால் அப்பெண்மணி வீரமரணத்தைத் தழுவுபவர் என்றே குறிப்பிடப் படலானார். அவர் குர்ஆனை ஓதத் தெரிந்தவராக இருந்தார் வயதான முதியவரை முஅத்தினாக ஏற்படுத்திக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அவரிடம் ஒரு ஆண் அடிமையும் ஒரு பெண் அடிமையும் இருந்தனர். தமது மரணத்திற்குப் பின் அவர்கள் விடுதலையாகலாம் என்று எழுதிக் கொடுத்திருந்தார். அவ்விருவரும் உமர் (ரலி) காலத்தில் அவரைக் கொன்றனர் (இதன் மூலம் வீர மரணம் அடைவார் என்ற முன்னறிவிப்பு நிறைவேறியது) கொலையாளிகள் சிலுவையில் அறையப் பட்டனர்.
நூல். அபூதாவூத் (591,592)
உம்மு வரகா என்ற பெண்மணி ஒரு முதியவருக்கும் தனது ஆண் அடிமைக்கும் இமாமத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் அவரது குடும்பத்தினருக்கு என்ற வாசகம் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் கூட இமாமத் செய்வதை அனுமதிக்கும் வகையில் உள்ளது. ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் என்பது குடும்பநிர்வாகத்தைக் கூறுகிறது இந்த ஹதீஸ் இமாமத்தைக் குறிப்பிட்டுக் கூறுவதால் இவ்வசனத்தின் கருத்தில் இது அடங்காது. பெண்கள் ஆட்சி செய்வதைக் குறித்த ஹதீஸ் பொதுவானதாக உள்ளது. இதுவோ குறிப்பாக இமாமத் பற்றிப் பேசுகின்றது. எனவே அந்த ஹதீஸில் இமாமத் அடங்காது.
வரிசையில் நிற்கும் போது ஆண்கள் முதல் வரிசை சிறுவர்கள் அடுத்த வரிசை பெண்கள் அதற்கு அடுத்த வரிசை என்பது இமாமாக நிற்பவருக்குப் பொருந்தாது. அது மஃமூம்களையே குறிக்கும்.
நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம் வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள் நாங்கள் அவர்களிடம் மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கும் (முஹம்மதுக்கு) என்ன? என்று கேட்டுக் கொண்டிருந்தோம் அதற்கு அவர்கள் அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்) தூதராக அனுப்பியிருப்பதாக. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) பொதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார் என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள் உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆகவே அவர்கள் அவரை அவருடைய குலத்தாருடன் விட்டு விடுங்கள் ஏனெனில் அவர்களை அவர் வென்று விட்டால் அவர் உண்மையான இறைத்தூதர்தாம் (என்று நிரூபணமாகிவிடும்) என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளார்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இல்லாவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களின் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று சொன்னார்கள் என்று கூறினார் ஆகவே மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்து கொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள் நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய சிறுவனாக இருந்தேன் நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டி வந்தது ஆகவே அந்தப் பகுதிப் பெண்மணியொருவர் உங்கள் ஓதுவோரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா? என்று கேட்டார் ஆகவே அவர்கள் (துணியொன்றை) வாங்கி எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள் நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சையைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
அறிவிப்பவர். அம்ர் பின் சலிமா(ரலி) நூல். புகாரி (4302)
இந்த ஹதீஸில் சிறுவர் இமாமத் செய்யம் போது பெரியவர்கள் பின்னால் நின்றுள்ளனர் சிறுவர் முந்தியும் பெரியவர் பிந்தியும் இருந்துள்ளனர் என்பதால் இவர்கள் சுட்டிக் காட்டும் நான்காவது ஆதாரமும் ஏற்புடையதல்ல. பெரும்பாலோர் இரண்டாவது கருத்தில் தான் உள்ளனர் எனினும் மூன்றாவது கருத்தே ஹதீசுக்கு ஒத்த முடிவாகவுள்ளது. எனவே பெண்கள் மஹ்ரமானவர்கள் முதியவர்கள் சிறுவர்கள் ஆகியோருக்கு இமாமத் செய்யலாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்ததை நாமும் அனுமதித்துக் தான் ஆகவேண்டும். நாமும் கூட இரண்டாவது கருத்தில் தான் இருந்தோம் இந்த ஹதீஸின் அடிப்படையில் பலரும் எழுப்பிய கேள்விகள் நியாயமாகவும் ஏற்புடையதாகவும் இருந்ததால் மூன்றாவது கருத்தையே நாம் தேர்வு செய்கின்றோம் அல்லாஹ் மிக அறிந்தவன்.
கேள்வி.7
குடும்பக்கட்டுப்பாடு ஹராம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் நேரடியான ஆதாரம் உண்டா? உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளலாமா?
பதில்:
நாங்கள் ஆண்மை நீக்கம் செய்து கொள்ளலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம் அவர்கள் அதற்பு அனுமதியளிக்கவில்லைஅறிவிப்பவர். இப்னு மஸ்வூத்(ரலி)நூற்கள். புகாரி. (5075)
குடும்பக்கட்டுப்பாடு செய்வதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக தடுத்துள்ளதால் கண்டிப்பாக குடும்பக்கட்டுப்பாடு செய்யக்கூடாது. எனினும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை உண்மையில் இருந்தால் அவர்கள் செய்து கொள்ளலாம் நிர்பந்தமான நிலையில் தடை செய்யப்பட்டவைகளை செய்வதற்கு இஸ்லாம் அனுமதித்துள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 6.119, 2.173, 5.3, 6.145, 16.115 )
கேள்வி.8
மாதவிடாய் ஏற்பட்ட பெண் மாதவிடாய் நின்றவுடன் உறவு கொண்டுவிட்டு இரண்டுக்கும் சேர்த்து ஒரு தடவை குளித்துக்கொள்ளலாமா?
பதில்:
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்; ''அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும். ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்." (2:222)
மாதவிடாய் ஏற்ப்பட்ட பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களுடன் உடல் உறவு கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இங்கு அல்லாஹ் தூய்மை என்று கூறுவது மாதவிடாய் நிற்பதையா? அல்லது மாதவிடாய் நின்று குளித்து தூய்மையாவதையா? என்ற வினாவிற்கு விடை கண்டால் உங்கள் கேள்விக்கு விடை தெரிந்து விடும்.மாதவிடாய் நிற்பதுதான் தூய்மையாவது என்று நாம் பொருள் கொண்டால் மாதவிடாய் நின்றவுடன் அவர்கள் தொழவேண்டும் ஏனெனில் அவர்கள் தூய்மையடைந்து விட்டார்கள். ஆனால் அப்படி யாரும் பொருள் கொள்வதில்லை எனவே இங்கு தூய்மை என்பது மாதவிடாய் நின்று குளித்து தூய்மையாவதையே குறிக்கிறது. என்று பொருள் கொள்வதே சரியாகும்; மாதவிடாய் நின்றபின் குளிக்காமல் உடல் உறவு கொள்ளலாம் என்பதற்கு ஹதீஸ்கள் இல்லாததால் பேனுதலான நடவடிக்கை இதுவாகவே இருக்கும். மேலும் இவ்வசனத்தில் கூறப்படும் தூய்மை என்பது தண்ணீர் மூலம் ஏற்படும் தூய்மையையே குறிப்பிடுகிறது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே குளிக்காமல் அவர்களிடம் உடல் உறவு கொள்ளக்கூடாது.
கேள்வி.9
குர்ஆனில் பல இடங்களில் உங்களுக்கு ஹ_ரூல் ஈன் என்ற பெண்கள் உண்டு என ஆண்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான் பெண்களுக்கு யாரும் கிடையாதா?
பதில்: இதைப் போன்ற கேள்வி அன்றைய நபித் தோழியர்களிடமும் எழுந்தது நபி(ஸல்) அவர்கள் அவர்களின் ஐயங்களுக்கு பதிலும் அளித்துள்ளனர்.நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில்) அனைத்தும் ஆண்களுக்குரியதாகவே குறிப்படப்பட்டுள்ளதாக காண்கிறேன். பெண்களுக்காக எதையும் குறிப்பட்டதாக நான் காணவில்லையே என்று கேட்டேன். அப்போது.
33:35 நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
என்ற வசனம் இறங்கியது.
அறிவிப்பவர். உம்மு அம்மாரா(ரலி), நூற்கள். திர்மிதீ
கேள்வி.10
உடலுறவில் ஈடுபடும் போது நிர்வாணமாக இருக்கலாமா?
பதில்: கணவன் மனைவி என்ற உறவின் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது உடலுறவின் மூலமே இந்த தாம்பத்ய உறவு முறையாக இல்லாததால் முறைதவறிப் போணோர் ஏராளம்.தாம்பத்ய வாழ்க்கை மூலம் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தவறிழைப்பதை விட்டும் தங்களை காப்பாற்றிக் கொள்கின்றனர் என்றாலும் அது புண்ணியத்தின் வெளிப்பாடு என்று கருதி உடலுறவில் ஏனோ தானோ என்று ஈடுபடுவோர் உண்டு.
மேலும் உடலுறவில் வரையறை என்ற பெயரில் சில தவறான நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டோரும் இதில் முழுமையான ஈடுபாட்டுடக் நடந்து கொள்வதில்லை. இது மாதிரியான காரணங்களால் தான் விபச்சாரம் பெருகுவதற்கும் ஆள்மாறாட்டம் நடப்பதும் பெருகிவிட்டது எனலாம்.
2:223 உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும்
என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
இந்த வசனம் மனைவியிடம் விரும்பியபடி உடலுறவில் ஈடுபடலாம் என்கிறது ஆடைகளை முற்றிலும் களைவது தவறாகும் வந்ற வாதத்தை அடியோடு நீக்குகிறது. ஏனவே நிர்வாணமாக உடலுறவு செய்வதால் குற்றமில்லை உடலுறவு சம்பந்தமாக நீங்கள் விரிவாக அறிந்து கொள்ள இல்லாத்தில் தாம்பத்யம் என்ற நூலை வாங்கிப்படியுங்கள்.
கேள்வி.11.
இறந்து விட்ட கணவனின் உடலை மனைவி குளிப்பாட்டலாமா?
பதில்:
கணவன் இறந்து விட்டால் இறந்த கணவன் பற்றிய நினைவும் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை பற்றி எண்ணமும் பெண் மனதில் நிலைத்து நிற்கும் இந்த நேரத்தில் கணவனை குளிப்பாட்டுவது பற்றியோ அவனுக்கு கஃபனிடுவது பற்றியோ ஒரு பெண்ணால் சிந்திக்க முடியுமா?ஆனாலும் ஒரு பெண் தன் கணவனை தானே குளிப்பாட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் வழி என்ன? இதற்குரிய பதில் காணத்தான் வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் மரணித்த காலம் இப்போது ஏற்பட்டால் அவர்களின் உடலை அவர்களின் மனைவியரே குளிப்பாட்டி இருப்பார்கள்.
அறிவிப்பவர். ஆய்ஷா (ரலி)நூற்கள். அஹ்மத் அபூதாவூத்
கவலையுடன் இருந்த நாங்கள் குளிப்பாட்டுவது பற்றி நினைக்க முடியவில்லை இப்போது மாதிரி இருந்திருந்தால் நாங்கள் குளிப்பாட்டி இருப்போம.; என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. இதிலிருந்தே கணவனின் மைய்யித்தை மனைவி குளிப்பாட்டலாம் என்பதை விளங்கலாம்.ஆப10பக்கர் (ரலி) அவர்கள் மரணித்த போது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) குளிப்பாட்டினார்கள்.
அறிவிப்பவர். அப்துல்லா இப்னு அபூபக்கர்(ரலி)நூற்கள் அல்முஅத்தா
நபித்தோழியர் ஒருவர் தன் கணவரை குளிப்பாட்டி உள்ளனர் என்பதை கவனிக்கும் போதும். இது அனுமதிக்கப்பட்ட விஷயமே என்பதைப் புரியலாம்இது போல் மனைவி இறந்து விட்டால் கணவன் குளிப்பாட்டலாமா? என்றால் குளிப்பாட்டலாம் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக உள்ளது.
எனக்கு முன் நீ இறந்து விட்டால் உன்னை நான் குளிப்பாட்டி கஃபனிடுவேன் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.அறிவிப்பவர். ஆய்ஷா(ரலி)நூற்கள். இப்னுமாஜா தாரமீ
கேள்வி.12
பெண்கள் பெருநாள் தொழுகையை அதிகமாக தக்பீர் கட்டி தொழக்கூடாது என்று சில சகோதரிகள் கூறுகின்றனர் தங்களின் பதில் என்ன?
பதில்:
பெருநாள் தொழுகையைப் பொறுத்தவரை அதிகமாக 12 தக்பீர்கள் என்பது தான் நபிவழி 6 தக்பிர் என்று கூற ஆதாரமே இல்லை.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளிலும் முதல் ரக்அத்தில் ஓதத்துவங்கும் முன் 7 தடவை அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள் இரண்மாம் ரக்அத்தில் ஓதத்துவங்கும் முன் 5 தடவை அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள்.அறிவிப்பவர்.
அம்ரு இப்னு அவ்ஃபு(ரலி)நூல். திர்மிதீ
இந்த ஹதீஸ்படி 7/5 என்று தான் அதிக தக்பீர் கூற ஆதாரம் உள்ளதே தவிர. 6 தக்பீர் என்பதற்கு ஆதாரமே இல்லை இதனால் தான் உங்களிடம் அந்க சகோதரிகள் அப்படி கூறியிருப்பார்கள்.
கேள்வி: 13
நான்கு திருமணங்கள் வரை ஆண்கள் புரிந்துகொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது. இதனால் எய்ட்ஸ் என்ற கொடிய நோய் வராதா?
பதில்:
ஒரு ஆண் பல பெண்களுடன் உறவு கொள்வதால் எய்ட்ஸ் நோய் வரும் என்று எந்த மருத்துவரும் கூறவில்லை. ஒரு பெண்ணிடம் பல ஆண்கள் உறவு கொள்ளும் போதுதான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது. ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் புரியும்போது அந்த நான்கு பெண்ணிடமும் ஒரு ஆண்தான் உறவு கொள்கிறான். இதனால் எய்ட்ஸ் நோய் ஏற்படுவதில்லை.
கேள்வி.14
குழந்தை பிறந்து எவ்வளவு நேரத்தில் பெயர் வைக்கவேண்டும் வேறு கடமைகள் உண்டா அகீகா என்றால் என்ன?
பதில்
அகீகாவைக் கொண்டு குழந்தை அடகு வைக்கப்பட்டுள்ளது. அக்குழந்தை சார்பாக ஏழாம் நாள் அறுத்து பலியிடவேண்டும் தலைமுடியை சிரைக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். ஸமுரா(ரலி) நூல். திர்மிதீ
அகீகா தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அதற்கவர்கள் ஆண்குழந்தைக்கு இரண்டு ஆடுகளும் பெண்குழந்தைக்கு ஒரு ஆடும் கொடுக்கவேண்டும். அவை ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பதால் இடையூறும் ஏற்படாது என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர். உம்மு குர்ஸ் (ரலி)நூல். திர்மிதீ
மற்றொரு அறிவிப்பில் ஒரே மாதிரியான இரண்டு ஆடுகள் ஆண் குழந்தை சார்பாக பலியிடப்படவேண்டும் என்று இடம் பெறுகிறது.
அபூதாவூதில் இடம் பெறும் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தமது பேரர்கள் ஹஸன் (ரலி) ஹ_ஸைன் (ரலி) சார்பாக ஒவ்வொருவருக்கு ஒரு ஆடு அகீகா கொடுத்ததாக இடம் பெறுகிறது.
மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து பிறந்த குழந்தைக்கு என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக அறியலாம்.
1. பிறந்த ஏழாம் நாள் பெயரிட வேண்டும்.
2. பிறந்த ஏழாம் நாள் மொட்டையடிக்க வேண்டும்.
3. பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுக்கவேண்டும்.(வசதி இருந்தால் ஆணுக்கு இரண்டு ஆடுகள் அல்லது ஒரு ஆடு. பெண்ணாக இருந்தால் ஒரு ஆடு அகீகா கொடுக்கவேண்டும்)
4. பொதுவான சுன்னத் என்று கூறப்பட்ட கத்னா என்பதை ஆண்களுக்கு வசதிபட்ட நாளில் செய்யவேண்டும்.ஏழு பதிநான்கு இருபத்தி ஒன்று ஆகிய மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் அகீகா கொடுக்கலாம் என்று வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல.
குழந்தையின் தலையை மொட்டையடித்து அதன் முடியளவு எடைக்கு வெள்ளி கொடுக்கவேண்டும் என்று கூறும் ஹதீஸும் பலவீனமானதாகும்.
குழந்தைக்கு பெயரிடும்போது வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்லவேண்டும் என்று கூறும் ஹதீஸும் பலவீனமானதாகும்
எனவே இவற்றை செய்ய வேண்டிய அவசியமில்லை.ஏழாம்நாள் பெயரிடும்போது குழந்தையின் வாயில் இனிப்பை வைத்து பெற்றோர்கள் அவர்களுக்கு பிடித்த பெயரை சூட்டி அழைத்துக் கொள்ளவேண்டும். அஸ்மா (ரலி) அவர்களின் குழந்தைக்கு பேரீத்தம் பழத்தை மென்று அதில் சிறிதை அக்குழந்தை ஊடடி அப்துல்லாஹ் என்று நபி (ஸல்) பெயரிட்டதாக இடம் பெறும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. வசதி படைத்தவர்கள் ஆண்குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடு இல்லையெனில் ஒரு ஆடு. பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆடு ஏழாம் நாள் அறுத்து பலியிட வேண்டும்.
கேள்வி.15
இஸ்லாத்தில் இருந்த ஒரு பெண்மணி மதம் மாறிவிட்டால் அப்பெண்ணை மகளாக ஏற்கலாமா?
பதில்:
ஒரு பெண் மதம் மாறிவிட்டதால் அவள் மகள் என்ற தகுதியை இழக்கமாட்டாள். இதைப்போல் பெற்றோர் மதம் மாறிவிட்டாலும் அவர்கள் பெற்றோர் என்ற தகுதியை இழக்கமாட்டார்கள். மதம் மாறிவிட்டால் முஸ்லிமானவரின் சொத்தில் அப்பெண்ணிற்கு எந்த பங்கும் கிடைக்காது என்றே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
கேள்வி.16
கொண்டைப் போட்டுக் கொண்டு தொழக்கூடாது என்று கூறுகிறார்களே இது சரியா?
பதில்:
பருவ வயதை அடைந்த பெண்கள் தலையில் துணியில்லாமல் தொழக்கூடாது என்று தான் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் கொண்டைப்போட்டுத் கொண்டு தொழ நபி(ஸல்) அவர்கள் தடைசெய்யவில்லை. தொழும் போது கொண்டையின் மீது துணியை போட்டுக்கொள்ள வேண்டும்.
கேள்வி.17
பெண்கள் தொழுகின்ற பாயிலேயே படுத்துறங்கலாமா?
பதில்:
என் பாட்டி முலைக்கா நபி (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார்கள். அவர்கள் சாப்பிட்டு விட்டுப் பின்னர் எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன் என்று கூறினார்கள். நான் பயன்படுத்தியதால் கறுத்துப் போய் விட்ட எங்களுடைய ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் தொழுகைத்காக நின்றார்கள் அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வாழும்) அனாதையும் நின்றோம். எங்களுக்கும் பின்னால் பாட்டி (முலைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்கு படுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
அறிவிப்பவர். அனஸ் (ரலி) நூற்கள். புகாரி. முஸ்லீம்
இந்த ஹதீஸில் அனஸ் (ரலி) அவர்களின் குடுப்பத்தினர் பயன்படுத்திய பாயில் நபி(ஸல்) அவர்கள் தொழவைத்துள்ளதால். தொழுகின்ற பாயில் படுக்கவோ வேறு விசயங்களுக்கு பயன்படுத்தவோ செய்யலாம் . ஆனால் தொழும் போது அப்பாய் தூய்மையானதாக உள்ளதா? என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தூய்மையாக இருக்கும் பட்சத்தில் அதில் தொழுதுகொள்ளலாம்.
கேள்வி.18
பெண்களுக்கு ஹிஜாப் (பர்தா அணிதல்) எப்போது கடமையாக்கப்பட்டது?
பதில்:
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்ட காலத்தில் (அதாவது ஹிஜ்ரி 3 அல்லது 5 ஆம் ஆண்டு) பர்தா பற்றிய 33.53 வது இறை வசனம் இறங்கியது.நபி(ஸல்) அவர்கள் ஐஸனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துத் தாம்பத்திய உறவை தொடங்கிய போது மணவிருந்து (வலிமா) கொடுத்தார்கள் மக்கள் சாப்பிட்டு விட்டுப் பேசிக் கொண்டே இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரவும் திருப்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக்கொண்டே அமர்ந்ததிருந்தனர்.நபி(ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்கள் இருந்த தம் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றதைப் பார்த்த போது பேசிக் கொண்டிருந்த இரண்டு பேர் வெகமாக வெளியே சென்று விட்டனர் அவ்விருவரும் வெளியே சென்று விட்டதாக நானே நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியப்படுத்தினேனா? அல்லது அவர்களுக்கு (இச்செய்தி வேறு யார் மூலமாவது) தெரிவிக்கப்பட்டதா? என நான் அறியேன். இதையறிந்த உடனே நபி(ஸல்) அவர்கள் வீட்டினுள் சென்று (அவர்களைத் தொடர்ந்து வீட்டினுள் செல்ல முயன்ற) எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள் அப்போது தான் பர்தா தொடர்பான இறைவசனம்
33:53 முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களைளும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது செய்வது உங்களுக்கு தகுமானதல்ல் அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.என்ற வசனம் இறக்கப்பட்டது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர். அனஸ் (ரலி) நூற்கள். புகாரி.
கேள்வி.19
பெண்கள் ஜமாஅத்துடன் தொழுவது அவசியமா?
பதில்:
ஜமாஅத்துடன் தொழுவது தனியாகத் தொழுவதைவிட 27 மடங்கு சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (புகாரி)
இதில் ஆண் பெண் என்று பிரித்துக் கூறவில்லை. ஒரு பெண் ஜமாஅத்துடன் தொழுதால் அது போன்ற நன்மை கிடைக்கும்.பெண்களைப் பொறுத்த வரை பள்ளிவாசல் சென்று ஜமாஅத்தாகத் தொழ வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பெண்கள் பள்ளிக்குச்சென்று தொழத் தடை செய்யாதீர்கள் ஆனால் அவர்கள் தங்கள் வீட்டில் தொழுவது தான் அவர்களுக்கு சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூற்கள். அஹ்மத், அபூதாவூத்.
அவர்கள் வீட்டில் தொழுவதால் அவர்களுக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.
கேள்வி.20
ஒரு ஆண் மருத்துவர் பரிசோதனை பிரசவம் மற்றும் தொழில் போன்ற தக்க காரணமின்றி அன்னியப் பெண்களின் உடலுறுப்புகளில் எதைப் பார்க்கலாம்? எவற்றை பார்க்கக் கூடாது. அதே ஆண் தன்னுடன் பிறந்த வயதுக்கு வந்த சகோதரியின் உடலுறுப்புகளில் எவற்றைப் பார்க்கலாம்? எவற்றைப் பார்க்கக் கூடாது?
பதில்:
பொதுவாகவே ஒரு ஆண் தக்க காரணமின்றி அன்னியப் பெண்களின் முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது என்றே இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.
24:30 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
அது போலப் பெண்களும் அன்னிய ஆண்களைப் பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
24:31 இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
அன்னியப் பெண்களின் முகம் கைகள் போன்றவற்றைப் பார்க்க நேரிட்டால் உடனே தலையைத் தாழ்த்தித் கொளளும்படி இஸ்லாம் கூறுகிறது. எதேச்சையாக அன்னியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் உனது பார்வையை திருப்பிக் கொள் என்று கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்.
நூற்கள்: முஸ்லீம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத்
எதேச்சையாகப் பார்த்தால் கூட உடனே பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும். அலியே! ஒரு அந்நியப் பெண்ணை எதேச்சையாகப் பார்த்துவிட்டால் பார்வையைத் தொடராதீர்! ஏனெனில் எதேச்சையான முதல் பார்வை உமக்குண்டு ஆனால் அதைக் தொடர்ந்து மீண்டும் பார்ப்பது உமக்கு ஆகுமானதன்று என அலீ(ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் புரைதா (ரலி) நூற்கள். அஹ்மத் திர்மிதீ அபூதாவூத் தாரமி.
வயதுக்கு வந்த உடன் பிறந்த தங்கையிடம் எந்ததெந்த உருப்புகளைப் பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறீர்கள்.
மானத்தை மறைக்கும் விதமாக ஆடையணிந்து இருந்தால் உடன் பிறந்த தங்கையைப் பார்க்கலாம். அதாவது ஹிஜாப் இன்றிப் பார்க்கலாம் அதாவது தலை முகம் கை கால்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அதுவும் இச்சையில்லா முறையில்தான் பார்க்கலாம். இச்சை தூண்டப்பட்டால் அது தாயாக இருந்தாலும் கூடப் பார்க்கக் கூடாது.
24:58 ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமானீ உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர்" நேருத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
இது அக்கா தங்கை தாய் போன்ற உறவுள்ள பெண்களிடம் எந்ததெந்த உடலுறுப்புகள் நாம் பார்க்கலாகாது என அறிவிக்கிறது.
கேள்வி.21
எங்கள் வீட்டில் மூன்று சகோதரிகள் உள்ளனர். ஜமாஅத்தாக தொழலாமா?எவ்வாறு தொழ வேண்டும்?
பதில்:
ஜமாஅத்தாக தொழலாம். பெண்களுக்குள் ஜமாஅத் நடக்கும்போது இமாமாக நிற்கும் பெண் வரிசையின் நடுவில் நிற்கவேண்டும். பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.ஆயிஷா (ரலி) அவர்கள் பெண்களுக்கு இமாமத் செய்வார்கள். அவர்கள் அப்பெண்களுடன் வரிசையின் நடுவில் நின்று கொள்வார்கள் என அதாஉ அறிவிக்கின்றார்கள்.
நூற்கள். ஹாகிம். இப்னுஅபீஷைபா.
ஆயிஷா(ரலி) அவர்கள் பெண்களுக்கு இமாமத் செய்வார்கள். கடமையான தொழுகையின் போது அப்பெண்களிடையே நிற்பார்கள் என்று ராயிதா அல்ஹன்பிய்யா கூறுகிறார்கள்.
நூற்கள். பைஹகீ தாரகுத்னீ.
கேள்வி.22
ஒரு பெண்ணை மணமகனின் பெற்றோர் மட்டுமே பார்க்கிறார்கள். ஒரு ஆண் தனக்கு மனைவியாக வரும் பெண்ணை அதைப்போல் ஒரு பெண் தனக்கு கனவனாக வரும் ஆணை பார்க்க உரிமை இல்லையா? மார்க்கத்தின் தீர்ப்பு என்ன?
பதில்:
மணமகன் மணப்பெண்ணை பார்த்துத்தான் திருமணம் செய்தாக வேண்டும். மார்க்கம் அப்படித்தான் கூறுகிறது. முகீரா இப்னு ஷீஃபா(ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணம் பேசினார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்கும் இடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகிரா(ரலி) அவர்களே அறிவிக்கின்றார்கள்.
நூற்கள். திர்மிதி. நஸயீ. இப்னுமாஜா. தாரமீ.
இன்று நடைமுறையில் இது ஒரு பெரும்; குறை போன்றே கருதப்படுகிறது. திருமணச் சட்டங்கள் பற்றி ஒரு நூலே வெளிவந்துள்ளது. அதைப் பார்வையிடுக!
கேள்வி.23
வீட்டில் உள்ள குளியல் அறையில் கணவன் மனைவி சேர்ந்து குளிக்கலாமா?பதில்.
நானும். நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம் என ஆயிஷா(ரலி) கூறினார்கள்.
நூல். நஸயீ
கணவனும் மனைவியும் சேர்ந்து குளிக்கலாம். தடையில்லை.
கேள்வி.24
ஜக்காத் கொடுப்பதை விரும்பாத கணவனுக்குத் தெரியாமல் மனைவி ஜகாத் கொடுக்கலாமா? கணவனுக்குத் தெரியாமல் மனைவி ஜக்காத் கொடுக்கக் கூடாது என்கிறார்களே இது உண்மையா?
பதில்:
ஜக்காத் என்பது இஸ்லாத்தின் கடமையான ஒன்றாகும். ஜகாத் கடமையாகி விட்டால் ஒரு முஸ்லிம் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும். ஜக்காத் கொடுக்காதவர்களுக்கு கடுமையான வேதனை இருப்பதாக ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன. எனவே மனைவிக்கு ஜக்காத் கடமையாக இருந்தால் அதைக் கொடுப்பதைத் தடுப்பதற்கு கணவனுகோ அல்லது வேறு எவருக்குமோ உரிமை இல்லை.கணவனுக்கு மனைவி கட்டுப்பட வேண்டும் என்பது நன்மையான காரியங்களில் மட்டும்தான். தீமையை கணவன் ஏவினால் அதற்கு கட்டுப்படக் கூடாது.
5:2 இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையான தண்டிப்பவன்.
கட்டுப்படுதல் என்பது நன்மையான காரியங்களில் மட்டும் தான். பாவமான காரியங்களில் கட்டுப்படுதல் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். அலீ(ரலி)நூற்கள். புகாரி. முஸலீம்.
மேற்கண்ட குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் படி கணவன் விரும்பாவிட்டாலும் மனைவிக்கு ஜகாத் கடமை என்றால் ஜக்காத்தை வழங்கியாக வேண்டும் என்பதை விளங்கலாம்.
இவையனைத்தும் மனைவிக்கென்று தனியாக சொத்துக்கள் இருந்து அவற்றுக்கு ஜக்காத் கடமையானால் மட்டுமே பொருந்தும். கணவனுடைய சொத்தில் இருந்து அவனுக்குத் தெரியாமல் மனைவி ஜக்காத்தை கொடுக்கக்கூடாது.
கணவனுக்கு ஜக்காத் கொடுக்குமாறு அறிவுரை கூறலாமே தவிர அவனுக்குத் தெரியாமல் அவனது பொருளை எடுத்துக் கொடுக்க மனைவிக்கு அதிகாரம் இல்லை.
கேள்வி.25
குழந்தை பிறந்த ஏழாம் நாளில் கொடுக்கப்படும் அகீகா ஆட்டின் இறைச்சியை குழந்தையின் பெற்றோர்கள் சாப்பிடக் கூடாது என்று மத்ஹப் மவ்லவிகள் கூறுகின்றார்கள் இது சரியா?
பதில்:
அகீகா ஆட்டின் இறைச்சியை குழந்தையின் பெற்றோர்கள் சாப்பிடக் கூடாது என்பதற்கு நாம் தேடிய வரையில் குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே அவ்வாறு சாப்பிடுவதற்குத் தடையில்லை.
கேள்வி.26
திருமணம் ஆன பெண் எந்த நோன்பும் வைக்க வேண்டுமானால் கணவனை கேட்டுக் கொண்டு தான் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே! சரியா?
பதில்:
தன் கணவன் ஊரிலிருக்கும் போது அவனின் அனுமதியின்றி நோன்பை நோற்க ஒரு பெண்ணுக்கு அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூற்கள். புகாரி திர்மிதீ. தாரமீ.
இந்த ஹதீஸை வைத்தே அப்படி கூறியிருப்பார்கள். பொதுவாக பெண்கள் அனுமதி கேட்டப் பிறகே வைக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறினாலும்; இப்னுமாஜா. அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவு செய்யப் பட்டுள்ள ஹதீஸ் ஒன்றில் ரமளான் மாதம் அல்லாத நபிலான நோன்பை என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
ரமளான் நோன்பு கடமையாகும். இது ஆண் பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமை என் குர்ஆனில் வசணம் கூறுகிறது.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.(2:183)
கணவன் ஊரில் இல்லாமல் வெளியூரில் இருந்தால் அவனின் அனுமதி பெற்றுத்தான் நபிலான நோன்பை வைக்க வேண்டும் என்பதில்லை. இதைக் கணவன் ஊரிலிருக்கும் போது என்று வாசகம் மூலம் விளங்கலாம்.
எனவே பெண்கள் ரமளான் மாதம் அல்லாத நபிலான நோன்பை நோற்க வேண்டுமானால் கணவன் ஊரில் இருந்தால் அனுமதி கேட்ட பிறகே நோற்க வேண்டும்.
கேள்வி.27
சில ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளனரா? இதுபற்றி நபி(ஸல்) கூறியது என்ன?
பதில்:
எங்களை திருமணம் செய்யும் படி ஏவியதுடம். திருமணம் செய்யாமலிருப்பதை நபி(ஸல்) தடுத்தார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூற்கள். அஹ்மத். இப்னுஹிப்பான்.
ஒரு முஸ்லிமை பொறுத்தவரை திருமணம் செய்யாமல் இருக்கத் கூடாது. அதே வேளையில் வசதி இல்லாதிருந்தால் திருமணம் செய்யாதிருக்கலாம்.
வாலிபர்களே! உங்களில் எவருக்கேனும் (திருமணம் செய்ய) வசதி இருந்தால் அவர் திருமணம் செய்யட்டும்! அது (அன்னியப் பெண்களை பார்ப்பதை விட்டும்) பார்வையை தடுக்கும். (திருமணம் செய்ய) வசதி இல்லை என்றால் அவர் நோன்பு வைக்கட்டும்! அது (தவறுவதிலிருந்து அவரைத் தடுக்கும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூற்கள். புகாரி. முஸ்லிம்.
இதுபோல் ஆண்மை இல்லாதிருப்பினும் திருமணம் செய்யக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சில நபித்தோழர்கள் திருமணம் செய்யாது இருந்துள்ளனர். அவர்கள் திருமணம் செய்யாதிருந்த காரணம் இன்னது தான் என ஹதீஸ்களில் காண முடியவில்லை. அவர்கள் திருமணம் செய்யாதிருக்க நியாயமான காரணம் இருந்திருக்கும் என்பதால் தான் நபி(ஸல்) அவர்கள் கண்டித்ததாக எந்த ஹதீஸும் இல்லை.
எனவே வசதி இல்லாதோர் திருமணம் செய்யாதிருக்கலாம். ஆசை உணர்வை தவிர்க நோன்பு வைக்க வேண்டும்.
கேள்வி.28
உறவினர்களுடம் ஒற்றுமையாக வாழ வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் நான் ஓற்றுமையாக வாழ விரும்புகிறேன். எனது உறவினர்கள் என்னைச் சேராமல் விலகி விலகிச் செல்கின்றனர். இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்:
அவர்கள் விலகிச் சென்றாலும் நீங்கள் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்குச் சில உறவினர்கள் உள்ளனர். அவர்களை நான் சேர்ந்து வாழ முயற்சி செய்கிறேன். ஆனால் அவர்கள் என்னை துண்டித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன். அவர்கள் எனக்குத் தீங்கிழைக்கிறார்கள். அவர்களை நான் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் அவர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை எனக் கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் கூறுவது போல செயல்பட்டு வந்தால் நீர் அவர்களை சுடு சாம்பல் உண்ண வைத்தவர் போன்றவராவீர் (சுடு சாம்பல் சாப்பிட்டவர் வேதனையடைவது போல அவர்கள் வேதனையடைவர்) இந் நற்பண்புகளுடன் நீர் செயல் படும் வரை உமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு உதவியாளர் இருந்து கொண்டேயிருப்பார் என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல். முஸ்லிம்.
நீங்கள் சேர்ந்து வாழுங்கள் அவர்கள் துண்டித்தாலும் பிரச்சனையில்லை. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.
சேர்ந்து வாழ்வதால் மேலும் பல நன்மைகளை நீங்கள் அடைவது உறுதி.
யார் தமது உணவுப்பொருட்களிலும் ஆயுளிலும் அருள் வளம் வேண்டுமென்று விரும்புகிறாரோ அவர் தமது உறவினரைச் சேர்ந்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். அனஸ் (ரலி) நூற்கள். புகாரி முஸ்லிம் அபூதாவூத்.
கேள்வி.29
கடமையான குளிப்பின்போது தோடு கழற்றிவிட்டு குச்சியை ஈரமாக்கி காது குத்திய துவாரத்தில் இட்டால்தான் குளிப்பு நிறைவேறுமா? அல்லது தோட்டோடு குளித்தாலே போதுமா?பதில்.இவ்வாறு சிரமப்பட்டு காதின் துவாரத்தில் தண்ணீர் செலுத்த வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென்பதை செய்தே காட்டிச் சென்றுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்கள் இரு முன் கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளுச் செய்வது போல் உளுச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் முக்கி அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதிவிடுவார்கள். பின்னர் அவர்கள் தலை மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்கள் உடல் முழவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர். ஆயிஷா(ரலி) நூற்கள். புகாரி (248) முஸ்லிம்.
புகாரியின் மற்றொரு அறிவிப்பில் (257) இரு முன் கைகளை கழுவியபின் மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள் என்று இடம் பெறுகிறது. இதுவே நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய குளிப்பு முறையாகும்.பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழியர்கள் கேட்டபோது அதற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
நான் அடர்த்தியான சடையுடைய பெண்ணாக இருக்கிறேன். நான் கடமையான குளிப்புக்கு சடையை அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தேவையில்லை. உன் தலையில் மூன்று முறை (தண்ணீரை ஊற்றுவது போதுமானது. பின்னர் உடல் முழுவதும்) தண்ணீரை ஊற்றிக் கொள் நீ தூய்மையடைவாய் என்று கூறினார்கள்.அறிவிப்பவர். உம்மு ஸலமா (ரலி)
நூற்கள். முஸ்லிம். திர்மிதீ. நஸயீ. அபூதாவூத். இப்னுமாஜா. அஹ்மத். தாரமீ
குளிக்கும்போது தனது முடியின் அடிப்பாகம் நனையுமாறு தண்ணீரில் விரல்களை முக்கி முடியின் அடிப்பாகத்தில் கோதிவிட்ட நபி(ஸல்) அவர்கள்; அடர்த்தியான சடைமுடியுடைய உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்டபோது அதை அவிழ்த்து சிரமப்பட்டு குளிக்கத் தேவையில்லை. சாதாரணமாக மூன்று முறை தண்ணீர் ஊற்றினாலே போதும் என்று கூறியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்களின் இந்த பதிலை கவனித்தால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.
கேள்வி.30
பெருந்துடக்குள்ள பெண்கள் குளிக்காமல் வீட்டு வேலைகளை செய்யலாமா? வெளியில் போகலாமா?
பதில்:
குளிப்பு கடமையானவர்கள் தாமதப்படுத்தாமல் குளித்துவிட வேண்டும். எனினும் வெளியில் போக வீட்டு வேலைகள் செய்ய எந்தத் தடையும் இல்லை.எந்த வீட்டில் உருவப்படமும், நாயும், ஜுனுபாளிகளும் குளிப்பு கடமையானவர்களும் உள்ளார்களோ அங்கு வானவர்கள் நுழைய மாட்டார்கள்.அறிவிப்பவர். அலீ(ரலி)
நூற்கள். நஸயீ. அபூதாவூத். தாரமீ. அஹ்மத்.
இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் ஜுனுபாளிகள் என்பதற்கு குளிப்பு கடமையாகி குளிக்காமல் தாமதப்படுத்துபவர்கள் இரவில் குளிப்பு கடமையாகும்போது தற்காலிக சுத்தமான உளுச் செய்யாமல் இருப்பவர்களையே குறிக்கும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இது சரியாகவே உள்ளது. இதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.
நபி(ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் தூங்க நினைத்தால் தங்கள் மர்மஸ்தானத்தைக் கழுவிவிட்டு தொழுகைக்குரியது போல் உளுச் செய்வார்கள்.
அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) நூற்கள். புகாரி(288)
நம்மில் ஒருவர் குளிப்பு கடமையான நிலையில் தூங்கலாமா? என உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அகற்கு ஆம் உங்களில் ஒருவர் குளிப்பு கடமையானவராக இருக்கும்போது உளுச் செய்துவிட்டுத் தூங்கலாம் என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர். இப்னு உமர் (ரலி) நூல். புகாரி(287)
குளிப்பு கடமையானவர் வெளியில் சென்று வரலாம் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் மிகத்தெளிவான சான்றாக அமைந்துள்ளது.நான் குளிப்பு கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்று கொண்டிருந்த சமயம் நபி(ஸல்) அவர்கள் என்னைச் சந்கிக்க வந்தார்கள். அப்போது நான் நழுவிவிட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் அபூஸுரைராவே! எங்கு நழுவிவிட்டீர்? என்று கேட்டார்கள். குளிப்பு கடமையாகியிருந்தேன் எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன் என்று கூறினேன். அப்போது ஸ_பஹானல்லாஹ் நிச்சயமாக ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். அபூஸுரைரா(ரலி) நூல். புகாரி.(283)
கேள்வி: ஒன்பது மாத நிறை மாத கர்ப்பிணிப் பெண் கணவன் இறந்தால் அப்பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டுமா? அல்லது பிரசவிக்கும் வரை இருக்க வேண்டுமா?
பதில்: 65:4 மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும், 'இத்தா"(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா"வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
இவ்வசனத்தில் அல்லாஹ் தலாக் விடப்பட்ட பெண்ணின் இத்தாகாலத்தை குறிப்பிடும்போதே கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவிக்கும் வரை இத்தா காலம் என்கிறான் எனினும் நபி(ஸல்) அவர்கள் கணவனை இழந்த பெண்களுக்கும் இதே சட்டம் பொருந்தும் என்று கூறியுள்ளார்கள்.
சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா (ரலி)) இறந்து விட்டார் அவர் இறந்து நாற்பது நாட்களுக்குப் பின்னால் சுபைஆ குழந்தை பெற்றெடுத்தார் உடனே அவரைப் பெண் பேசப்பட்டது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு திருமணம் முடித்து வைத்தார்கள் அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில்(ரலி) அவர்களும் ஒருவராவார் எனவே கர்ப்பிணிக்கு இத்தா காலம் பிரசவம் வரையில் தான் என்று உம்மு ஸலமா(ரலி) கூறினார்கள்.அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி)நூற்கள். புகாரி. (4909)
கேள்வி: குழந்தை பிறந்தால் அகீகா முதல் குழந்தைக்கு மட்டும் கொடுத்தால் போதுமா? அல்லது அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டுமா? குழந்தை பிறக்கும்போது வசதி இல்லாவிட்டால் என்ன செய்வது?
பதில்: நபி(ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) ஹ_ஸைன் (ரலி) ஆகிய இருவருக்கும் அகீகா கொடுத்தார்கள். அறிவிப்பாளர். புரைதா (ரலி) நூற்கள். நஸயீ. அஹ்மத்.
நபி(ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) ஹ-ஸைன் (ரலி) ஆகிய இருபேரர்களுக்கும் அகீகா கொடுத்திருப்பதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் அகீகா கொடுக்க வேண்டும் என்பதை உணரலாம்.
குழந்தை பிறந்தபோது வசதி இல்லையானால் அவர்மீது கடமையே இல்லை எவருக்கு வசதி வாய்ப்பு உள்ளதோ அவர் மட்டுமே நிறைவேற்ற வேண்டும். வசதி வந்த பிறகு அதை நிறைவேற்றலாம் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் அதற்கு ஆதாரம் கிடையாது.
கேள்வி
ஆண் பெண் இருவருக்குமிடையே விவாகரத்தானால் குழந்தையின் நிலை என்ன?
பதில்
கைக்குழந்தையாக இருந்தால் தாயே அந்த குழந்தைக்கு உரித்தானவள்.
ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து என்னுடைய இந்த மகனுக்கு என்னுடைய வயிறு தான் பாத்திரம். என்னுடைய மார்பு தான் பானம். என்னுடைய மடி தான் தங்குமிடம். இவனுடைய தந்தை என்னை தலாக் விட்டு விட்டார். என்னிடமிருந்து இவனை பறிக்க நாடுகிறார் என்றதும் நபி(ஸல்) அவர்கள் நீ திருமணம் முடிக்காத வரை நீதான் அதற்கு தகுதியானவள் என்றார்கள்.
அறிவிப்பவர். அப்துல்லாஹ் இப்னு அம்ரு.
நூற்கள். அபூதாவூத். அஹ்மத்.
அதே நேரம் குழந்தை கொஞ்சம் வளர்ந்து விட்டால் குழந்தை யாரிடம் இருக்க விருப்பப்படுகிறதோ அவரிடம் வளர வேண்டும்.
ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து என்னுடைய கணவர் என் மகனை அழைத்து போக நினைக்கிறார். அவன் எனக்கு குடிபானம் தருகிறான் எனக்கு பலன் தருகிறான் என்றார். அப்போது நபி(ஸல்) அக்குடந்தையிடம் சொன்னார்கள். இது உன் தாய் இது உன் தந்தை நீ விரும்பியவரின் கையை பிடி என்றார்கள். தாயின் கையை அக்குழந்தை பிடித்தது அதை அவள் அழைத்து சென்றாள்.
அறிவிப்பவர். அபூஹ-ரைரா (ரலி)
நூற்கள். அபூதாவூத். நஸயீ.
கேள்வி:
உடலுறவு கொண்டவர் உடல் நலக்குறைவால் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அவர் உளுச் செய்துவிட்டு (குளிக்காமல்) தொழலாமா?
பதில்:
நீங்கள் நோயாளிகளாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடலுறவு கொண்டிருந்தாலும்) அப்போது உங்களுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும் உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை வருத்தக்கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தவும் பொருட்டு தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
ஸலாஸில் போரின் போது குளிரான இரவிலே ஸ்கலிதம் ஏற்பட்டது குளித்தால் நோய் வந்துவிடும் என அஞ்சி தயம்மும் செய்து என் தோழர்களுக்கு நான் பஜ்ர் தொழுவித்தேன். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தோழர்கள் முறையிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அம்ரே! நீ உன் தோழர்களுக்கு குளிப்பு கடமையான நிலையில் தொழுவித்தீர்களாமே! என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் குளிப்பதற்கு தடையாக இருந்த விஷயத்தை கூறி,
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
என்ற இறைவசனத்தையும் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள் ஆனால் எந்த குறையும் சொல்லவில்லை.
அறிவிப்பவர். அம்ர் பின் அல் ஆஸ் (ரலி)
நூல்கள். அபூதாவூத். அஹ்மத். தாரகுத்னீ.
நோயாளியாக இருப்பவர் தயம்மும் செய்து கொள்ளலாம் என்று திருமறைக்குர்ஆனும். நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளதால் உளுச் செய்யாமல் தயம்மும் மட்டும் செய்து தொழுது கொள்ளலாம்.
கேள்வி:பெண்கள் தர்ஹாவிற்கு செல்லக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் ஆண்கள் ஜியாரத் செய்யலாம் என்று கூறுகிறீர்கள் ஜியாரத் என்றால் என்ன?
பதில்:
தர்ஹாவிற்கு பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட அங்கு செல்லக்கூடாது. இன்று தர்ஹா என்பது அனாச்சாரங்கள் நடைபெறும் இடமாக மாறிவிட்டது மேலும் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் தம் தேவைகளை முறையிடுகின்றளர். இது அல்லாஹ் மன்னிக்கமுடியாத ஷிர்க் (இணைவைத்தல்) என்ற பெரும் பாவமாகும்.
என்றென்றும் உயிரோடு இருப்பவனும் எங்கிருந்து அழைத்தாலும் எந்த மொழியில் அழைத்தாலும் பதிலளிப்பவனும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அல்லாஹ்விற்க்கு மட்டும் உள்ள இந்த சக்தியை தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு வழங்கி இணைவைக்கின்றனர்.
மாற்று மதத்தவர்கள் தங்கள் தெய்வங்களுக்கு செய்யும் அர்ச்சனைகள் போல் சில முஸ்லிம்களும் தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு செய்கிறார்கள் இது இஸ்லாத்தின் கொள்கை கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.
அடக்கம் செய்யப்பட்டபின் அங்கு கட்டடம் எழுப்புவது அதன் மீது (சந்தனம் போன்றவை) பூசுவது போன்றவற்றை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனவே அங்கு ஆண்களும் பெண்களும் செல்லக்கூடாது.
ஜியாரத் என்பதற்கு அகராதியில் சந்தித்தல் என்று பொருள். நபி(ஸல்) அவர்கள் மண்ணறைகளுக்கு (மையவாடிகளுக்கு) சென்று வருவதை ஜியாரத் என்று கூறியுள்ளார்கள் இவ்வாறு செல்லும் போது நாமும் கூட இந்நிலையை அடைய நேரிடும் என்ற உணர்வு ஏற்பட்டு மறுமை சிந்தனை உருவாகும். எனவேதான் நபி(ஸல்) அவர்கள் ஜியாரத் செய்ய அனுமதி வழங்கியுள்ளார்கள்.
கப்ருகளை ஜியாரத் செய்வதை நான் தடை செய்திருந்தேன் (இப்போது) நீங்கள் அங்கு ஜியாரத் செய்யுங்கள் ஏனெனில் அது மறுமையை நினைவுபடுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். புரைதா (ரலி) - முஸ்லிம், திர்மிதீ
இப்னுமாஜாவின் அறிவிப்பில் உலக பற்றை போக்கும் என்று இடம் பெற்றுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன, வல் முஸ்லிமீன, வஇன்னா இன்ஷா அல்லாஹ{பிக்கும் லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபிய்யா
என்று மையவாடிக்கு செல்பவர்கள் கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் (இவ்வாசகங்களை) கற்றுத்தந்தார்கள்.
பொருள் :இந்த கப்ரு வீட்டிலுள்ள முஃமினான முஸ்லிமானவர்களே உங்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டும். இறைவன் நாடினால் நாங்களும் (விரைவில்) உங்களை சந்திப்போம். நம்மில் முந்தியவர்களுக்கும் பிந்தியவர்களுக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டுமாக.
கேள்வி:
1. குடும்பத்தை பராமரிக்காமல் இறைக் கட்டளைக்கு மாறாக குடிபழக்கமுள்ள கணவனுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய படி பணிந்து நடக்க வேண்டுமா?
பதில்:
நற்காரியங்களை எவர்கள் கூறினாலும் கட்டுப்படவே வேண்டும் இறைக்கட்டளைக்கு மாற்றமான காரியங்களை யார் ஏவினாலும் கட்டுப்பட்டு நடக்கக்கூடாது இதுவே இஸ்லாத்தின் கொள்கை. இதன் படி கணவன் குடிக்காரனாக இருந்தால் அவரைத் திருத்த வேண்டும். நற்காரியங்களை ஏவினால் கட்டுபடவே வேண்டும். தீய காரியங்களுக்கு ஒத்துழைக்கக் கோரினால் கண்டிப்பாக ஒத்துழைக்கக் கூடாது.